நம் குரல்

கானகம் உண்ணும் புலி

கானகத்தின் மீது ஏறும் சூரியன் நீட்டிய நிழற் கிளைகளில் உறங்குகிறது கானகப்புலி. கண்கள் தீங்கங்குகளாயும் அதன் நகர்வு நிழல் அலைகளாயும். புலியின் கண்கள் இலைகளாகி இலையின் சருகுகளாகிக் கானகத்துள் புயலாகி இரையும். நிகரற்ற வேட்கையுடன் கானகத்தின் மெளனத்தைக் கலைத்துப் பார்க்கும். அதன் வெளியெங்கும் வெயில் வெறிக்கும் பார்வையுடன் கானலாகிக் காத்திருக்கும். புலி அயராது துரத்தி அடித்துச் சாய்த்த மானைப் போல பகல் மூச்சிளைக்க மடியும். இரவின் முறையில் கானக எல்லை அழியும். இருளடர்ந்த கானகம் புலியாகி நகரும் வேளையே அந்தி என மிருகங்கள் சங்கேதங்களால் பரிமாறிக் கொள்ளும். புதராகி அமர்ந்த பொழுதும் புலியாகி எழுந்த பொழுதும் உயிரின் காற்றழுத்தம் மூச்சடைக்கும். புலி தின்ற கானகம் நான். கானகமாகி நின்ற புலியும் நான்.








குட்டி ரேவதி
நன்றி: ‘கல் குதிரை’

2 கருத்துகள்:

நிலாரசிகன் சொன்னது…

கவிதை அருமை.

பெயரில்லா சொன்னது…

புலி தின்ற கானகம் நான். கானகமாகி நின்ற புலியும் நான்.

good.....pennea