நம் குரல்

பாலியல் அரசியல் கவிதை - 4

4. எத்தகைய பேருடல் இது!



எத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன்.
எத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன்
எத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன்
மில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ
என் யோனி வற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது

இன்று என் பேருடல் காற்றில் படபடக்கும்
ஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற
மடிந்து விரிகிறது
வெற்றுடலாய் இருக்கிறது

தேவதைகளின் வார்த்தைகளால் நிரம்பிய
முதுமையான தாழி 
இறக்கைகளை விரித்து தனக்கே வானம் 
செய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து

இனி எப்பொழுதுமே சாவமுடியாது
யோனி மறைந்து அழிந்து காற்றாகி இன்னொரு
யோனியாகப் பூக்கும்
பல யோனிகளின் ஆதி வாயிலாகும்



குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 3





3. தட்டாமாலை


என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன்
மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம்
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை
நாளங்களில் அதன் பாய்ச்சல் 
வேட்கையுடன் உன்னைத் தேடி 
உடலை உனக்குள் கவிழ்க்கிறேன்
நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன்

தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத்
தயங்கியவனிடம்
மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே
அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும்
கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி
நீயும் சுழலுவாய்
மெல்ல நீயும் நானும் தரையிலிருந்து உயருவோம்
உறுப்புகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள
அனுமதிப்போம்
மதுவின் ஊற்று அடர்ந்து வேகமாய்ச் சுரக்கும் கணத்தில்
நீ பருகும் வேகமும் உன் பவளவாய்ச் சிவப்பும்
கொள்ளை கொள்ளும்  காட்சியாகும்

நீ மது தேடி வீதிகளில் அலையும் 
ஒரு மகா குடிகாரன்
தாடைகளில் வளர்ந்த புல்வெளியிலும் 
மார்புகளில் மண்டிய புதர்களிலும்
தேடி அலைந்து கிடைக்காமல் போனதன்
சோகங்கள் பூத்துக் கிடந்து சருகாகும்
நூலாம்படை படரும்

மதுவைக் குடிக்க அலைபவன் நீ
மது சுரக்கும் உடல் அற்றவன் நீ
மதுக் குடுவைகளும் பானைகளும் தாழிகளும்
தேடித் தேடி ஒவ்வொரு உடலாய்த் தேடி
தோற்றுப் போவாய் நீ
அதற்கு ஒரு யோனி செய்யவேண்டும்
அதுவே மதுக்குடுவை மதுவின் தாழி
மதுவின் கடல்


குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 2

2. ஃபக்கிங் என்ற பிசினெஸ்




ஃபக்கிங் என்ற பிசினெஸ்
ஆண்கள் பெண் பாலியல் உறுப்பை
எரிச்சலுறுத்தும் ஒரு திராவக வார்த்தை
அல்லது
மனித இனத்துக்கே
ஃபக்கிங்கை கேடுகெட்டதாக அறிய வைக்கும்
ஒரு விடாமுயற்சியுடைய பிசினெஸ்
அப்படி ஒன்றும் அவர்கள் ஃபக்கிங் செய்யாமல் 
இருப்பதில்லை
காலையும் மாலையும் இரவும் கற்பனையிலும்
எந்த வயதுப் பெண் என்றாலும் அவளைக் கீழே வீழ்த்தி
நவ நாகரீகக் குளிர்பானத்தைக் குப்பியிலிருந்து
பருகிய சுகத்தை அடைவது போல
எளிதாகக் கடந்து செல்வார்கள் 
மனம் குமட்டும் ஒரு காட்சியை 
ஆற்றிக்கொள்ளுவது போல
கழிந்து விட்டு நகர்ந்து செல்வது போல
ஃபக்கிங் செய்யும் தொழில் நுட்பமே ஆண்மை 
எனப்படுவது
அவர்கள் செய்வதையே அவர்கள் எள்ளுகிறார்கள்
என்று கொள்ள முடியாது
பெண்ணின் மலர் போன்ற உறுப்புடன்
சம்பந்தப்பட்டது என்பதால்
ஃபக்கிங் என்பது ஒரு கெட்ட வார்த்தையாகும்
தகுதியைப் பெற்றது

 ஃபக்கிங் என்ற வார்த்தைகளை 
உதிர்க்கும் ஆணின் பிஸினசையே 
பெண்களும் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்
எங்கெங்கும் ஃபக்கிங் என்ற சொல்
எதிரொலித்த போது
இருபாலின் உறுப்புகளையும் ஏலமிட்டது


ஏலங்களுக்குப் பெறப்படும் இவ்வுறுப்புகள்
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில்
ஃபக்கிங் என்பது பிசினெஸாகும்
இயந்திரமே எல்லாவற்றையும் செய்வதில்

மனிதவிலங்கு பூரித்துப்போகலாம்


குட்டி ரேவதி

பாலியல் அரசியல் கவிதை - 1





1. விறைத்த குறிகளாலான மாலை


விறைத்த குறிகளை அரிந்து வந்து
மாலைகளாக்கவேண்டும்
மைக்கின் முன்னால் காமிராவின் முன்னால் 
மக்கள் கூட்டத்தின் முன்னால்
போராளிப் பெண்கள் முழக்கமிடுகிறார்கள்
குழுமியிருக்கும் முதல்முறை போராளிப்பெண்கள்
சிரிக்கிறார்கள் கைதட்டுகிறார்கள் வரவேற்கிறார்கள்
பெண்களைப் பேசவிட்டு சற்று தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கும் ஆண்கள்
முழங்கும் பெண்களின் யோனிப்பாகங்களைப் பற்றி
கிசுகிசுக்கிறார்கள்
அகராதியின் கனதி கருதி
பதிவாகாமல் போன 
'தேவடியா!' போன்ற வார்த்தைகளை
உதடுகளால் சுகித்துப்பார்க்கின்றனர்
முதல்முறையாக பகிரங்கப்படாமலேயே பகிரங்கமாவது
பெண்ணுறுப்புகள் தான் 
சுரந்து கொண்டிருந்த பெண்ணுறுப்புகள்
சுரப்பு நின்று போயிருந்தன
ஆண்மைக்குறைவினால் பதற்றப்பற்றவன்
படுக்கையறையில் 
தன் வன்முறையை நிரூபிக்கமுடியாமல் தோற்றுப்போனதில்
கத்திகளால் கனவுகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான்
இரவின் சுவரெங்கும்
அவன் தோன்றிய யோனிக்குழிகள்
எவரிடம் இருந்தன அவளிடமே இருந்த போதும்
விரைகள் தோன்றி வந்த உடல்களிடம்
ஏன் அவள் இத்தகைய போரை நிகழ்த்தவேண்டியிருக்கிறது?


நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?



குட்டி ரேவதி

உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்

நீதியரசர் கிருஷ்ணய்யர் 99வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணய்யர் விருதுகள் 2013
உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்
23/11/2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு
சர். பிட்டி தியாகராயர் அரங்கு, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர்

கிருஷ்ணய்யர் விருதுகள் 20131915ம் ஆண்டு பிறந்து மெட்ராஸ் மாகாணத்தின் சமூகநீதி வழக்குரைஞராக பணியாற்றி,பிறகு கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டதுறை, உள்துறை, நீர்வளம் மற்றும்மின் துறை அமைச்சராக பதவிவகித்து; பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். தன்னுடைய99வது வயதிலும் நீதி, மனித நேயம், மனித 
உரிமைகள் என தொடர்ந்து போராடிவரும்மரணதண்டனை எதிர்ப்பு போராளி கிருஷ்ணய்யரின் 
பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவதுவருடமாக கிருஷ்ணய்யர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட 
இருக்கின்றார்கள்.
கிருஷ்ணய்யர் மரணதண்டனை எதிர்ப்பு விருது
மரணதண்டனையை தத்துவார்த்தரீதியாக எதிர்த்து அதன் ஒழிப்பிற்காக பங்காற்றி; இந்தஉயரிய 
நோக்கத்தின் நியாயத்தை மக்களிடையே பரப்பி வரும் செயலுக்காக வழங்கப்படுவது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் மும்பை வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது திருமதி மகாசுவேதாதேவி – 
வங்காள எழுத்தாளர்
கிருஷ்ணய்யர் மனித நேய விருது
இனம், மொழி பூகோள எல்லைகளை கடந்து மனித நேயத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்கும்உதாரண 
செயல்களையும், அச்செயலாற்றியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும்விருது 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் நடிகர் மம்முட்டி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மனித நேய விருது
திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் – சமூக சேவகர்
செங்கொடி விருது
கொண்ட நோக்கத்தில் வழுவாமை, தியாகம் வீரம் எனப் போற்றுதர்குரிய குணங்களைவெளிப்படுத்தும் செயற்கரிய செயல்களை செய்த பெண் செயல்பாட்டாளர்களுக்குவழங்கப்படும் விருது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்வடிவாம்பாள்அங்கயற்கண்ணி 
மற்றும் சுஜாதா
2013ம் ஆண்டுக்கான செங்கொடி விருது
இடிந்தகரை பெண்கள் சுந்தரிசெல்விசேவியரம்மாள்
உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்படம்
மரணதண்டனையை கருப்பொருளாக கொண்டு மாறிவரும் சமூக கலாச்சார சூழலில்இத்தண்டனை   குறித்து ஆழமாக அலசி ஆராயும் ஒரு ஆவணப்படம். இந்த ஆவணப்படம்பேரறிவாளன் என்ற ஒரு மரணதண்டனை சிறைவாசியின் வாழ்வை ஆதாரமாக கொண்டுஅதனூடாக பயணித்து இத்தண்டனையின் 
தேவையை கேள்விகுள்ளாக்கும் ஒரு வரலாற்றுஆவணம். பல வெளிவராத வரலாற்று உண்மைகளை 
உள்ளடக்கி இருக்கும் இந்தஆவணப்படம் நீதித்துறை வல்லுனர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், 
சமூகவியலாளர்கள்,திரைத்துறையினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்க திரையிட்டு 
வெளியிடப்படஉள்ளது. 
மரணதண்டனை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகும் இந்நிகழ்வில்அனைவரும் பங்குகொள்ளவும்
மேலும் இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் மரண தண்டனை 
எதிர்ப்புகூட்டமைப்பு தங்களை அன்புடன் அழைக்கின்றது




மரணதண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு – 9884021741, 8883930017

நிகழ்சி நிரல்
நேரம்நிகழ்வு
4.00 வரவேற்புரை
4.15தலைமையுரை – விடுதலை ராஜேந்திரன்
4.45விருதுகள் அறிமுகம்விருது பெறுவோர் அறிமுகவிருதுகள் வழங்குதல்
5.30உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட வெளியீடு
படத்தை வெளியிடுபவர் பாரதிராஜாஜனநாதாதன் ஆவணப்படத்தை பெற்றுக்கொள்பவர் ஒளிவண்ணன்.
அமீர்வெற்றிமாறன்சேரன்
6.15தேநீர் இடைவேளை
6.30திரைப்படம் வெளியீடு
7.30சிறப்புரை
இரா.நல்லகண்ணு
பழநெடுமாறன்
வைகோ
புலமைபித்தன்
ஜி.ராமகிருஷ்ணன்
தொல்.திருமாவளவன்
செந்தமிழன் சீமான்
கோ..மணி
கோவை இராமகிருஷ்ணன்
பண்ருட்டி வேல்முருகன்
மருத்துவர் கிருஷ்ணசாமி
தனியரசு
முனைவர் ஹாஜா கனி
தெஹலான் பாக்வி
பெமணியரசன்
தியாகு
ஹென்றி டிபேன்
9.50நன்றியுரை – அன்பு தனசேகரன்


அழுகையற்ற மரணம்






அன்று மாலை, அந்த வீட்டு முன்னால் என்றும் காணாத வகையில் பத்து பேர் கூடியிருந்தார்கள்.

சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள். அங்கே நின்றவர்களும் கைபேசியைக் காதில் ஒட்டவைத்துக் கொண்டு நின்றார்கள். சத்தமே இல்லாமல் பேசினார்கள்.

அந்த நகரைக் காவல் காக்கும் காவல்காரர் அவர்களிடமிருந்து தள்ளி நின்று கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபொழுது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றார்.

இரவு நடுநிசி வரையிலும் எவர் எவரோ வந்தார்கள், போனார்கள். என்றாலும் ஒரு சிலரே வந்தார்கள் போனார்கள். மனித நடமாட்டமாய் இல்லாமல், மளிகைக்கடைக்கு வருபவர் அளவே கூட்டமும், பதட்டமும்.

மறு நாள் காலை, வெளியூரிலிருந்து கூட்டமாய்  வந்து  இறங்கினார்கள். உறவினர்களாக இருக்கவேண்டும்.

வீட்டின் முன்னால் முந்தைய நாள் கண்டதைப் போலவே பத்து பேரே கூடியிருந்தார்கள். 

அவர் இறந்து போய், முழு இரவும் கடந்த பிறகும் எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. கதவைத் தட்டி நான் தான் சொன்னேன்.

மதியவேளையில், இறந்தவரின் உடல் கழுவி, திருநீறு பூசி முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஐம்பது வயதுக்குக் குறைவாகவே இருக்கும். அவரைச் சுற்றிலும் அடித்து அழுவார் என்றோ தள்ளி நின்று அழுவார் என்றோ எவருமே இல்லை.

உடலைத் தூக்கிச் செல்கையிலும் எந்தச் சந்தடிச்சத்தமும் இல்லை. என் கவனம் மாறியிருந்த வேளையில் இது நடந்திருந்தது.


ஆனால், அவரை நினைத்து அழும் வேளைகளும் நினைவுகளும் எவருக்கும் வாய்க்காமல் இருக்கும், இல்லாமல் போகும் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்.



குட்டி ரேவதி