நம் குரல்

அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள்




எனது ஐந்து கவிதை நூல்கள் யானுமிட்ட தீ, உடலின் கதவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் ஆகியவை அடையாளம் வெளியீடாக வந்துள்ளன. 


நூல்கள் கிடைக்குமிடம்: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310,
திருச்சி மாவட்டம், இந்தியா தொலைபேசி 04332 -273444

1. யானுமிட்ட தீ (2010)


சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றனஉடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றனதொல் அறத்தை மீட்டெடுக்கின்றனவரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும்அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றனஇதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.


2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல்பெண் உடல்உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றனஏக்கம்நிராசை,காமம்மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றனஇயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறதுபெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றனஅந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றனஇதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

3. உடலின் கதவு (2006)
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம்புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும்ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றனகவிதை வரிகள் தோறும் படிமங்களும்தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றனசில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றனகவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம்  இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

4. முலைகள் (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறதுஇத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறதுஅதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறதுஉத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றனஇயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.


5. பூனையைப் போல் அலையும் வெளிச்சம் (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளனஇக்கவிதைகள் கோபம் கொள்கின்றனகாதல் வயப்படுகின்றனகாமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலைஜீவிதத்தின் உயிர்த்துடிப்புபேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மைஇருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றனஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றனபுதிய சொல்லாட்சிகளும்புதுப்புது சொல்லிணைகளும்மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.


குட்டி ரேவதி

"லெனின் விருது" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியான குறும்பட / ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடல் நிகழ்ச்சி.












தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வழங்கி வருகிறது. குறும்பட / ஆவணப்படத்துரையில் மிக சிறப்பாக பங்காற்றி வரும் ஒருவருக்கு வழங்கப்படும் இவ்விருது பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும், கேடயமும் உள்ளடங்கியது. இந்த ஆண்டு இவ்விருது வழங்கும் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்று:
இதுவரை தமிழில் வெளிவந்த ஐந்து சிறந்த குறும்படங்கள் திரையிடல்:
நாள்: ஆகஸ்ட் 05, வெள்ளிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


திரையிடப்படும் குறும்படங்கள்:
நாக் அவுட் - பீ.லெனின்
நானும் - மாமல்லன்
ஆயிஷா - சிவக்குமார்
தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த்
வன்னி எலி - சுபாஷ்
நிகழ்ச்சி இரண்டு:


குறும்பட / ஆவணப்படங்களுக்கான தேவை / குறும்பட / ஆவணப்பட வரலாறு குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தல்.
ஒரு சிறப்பு அழைப்பாலருடன் ஐந்து குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடும் நிகழ்வு.


சிறப்பு அழைப்பாளர்: சீனு ராமசாமி (திரைப்பட இயக்குனர்)
அறிவழகன் (குறும்பட இயக்குனர்)
சுப்புராஜ் (குறும்பட இயக்குனர்)
பொன்ராஜ் (குறும்பட இயக்குனர்)
ஸ்ரீகணேஷ் (குறும்பட இயக்குனர்)
ஜெயராவ் (நிறுவனர், தியேட்டர் லேப்)
நாள்: ஆகஸ்ட் 06, சனிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


நிகழ்ச்சி மூன்று:
தமிழ் குறும்பட / ஆவணப்பட வரலாறு, அழகியல், அரசியல், அதன் வளர்ச்சி குறித்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி.
பங்கேற்பு:
கைலாசம் பாலச்சந்தர்
அஜயன் பாலா
பிரசன்னா ராமசாமி
ம. சிவக்குமார்
ஆர். ஆர். சீனிவாசன்
வெளி ரங்கராஜன்
குட்டி ரேவதி
கோவி. லெனின்
அமுதன்
ரமணி
சோமித்ரன்
நிழல் திருநாவுக்கரசு
நுங்கு கங்கைக் குமார்
இன்னும் பலர்..
நாள்: ஆகஸ்ட் 07, ஞாயிற்றுக் கிழமை
இடம்: ஜீவன் ஜோதி அரங்கம், எக்மோர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


அனைவரும் வருக..