நம் குரல்

பெண்கள் தினம்!





எந்தக் காலகட்டத்தையும் விட, தற்பொழுது தான் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேவையும் பொருத்தமும் நிறைய இருப்பதாக நினைக்கிறேன்!

சமீபத்திய நிகழ்வுகளால், பெண்கள் மீது இது வரையிலும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த வன்முறை பகிரங்கமாவதையும் அதிகமாவதையும் உணரமுடிகிறது.

பெண்களுக்குக் குடும்பமும் வீடும் கூட பாதுகாப்பானதாக இல்லை என்பதை முதலில் நாம் அறியவேண்டும்.

பெண்கள் ஆண்களை அறியவும் கையாளவும் முடியாதபடிக்கு அறியாமையே பெண்களுக்கு உணவாக அளிக்கப்படுவதை முதலில் பெண்கள் மறுக்கவேண்டும்.

சாதிய அமைப்புகளின் 'மினியேச்சர்' போல இயங்கிக்கொண்டிருக்கும் வீடு, திருமணம், குடும்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் அவசியப்பட்டால் புறக்கணிக்கவும் பெண்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஆனால், நம் உடல் தான் எல்லா அறநெறிகளையும் பயில்வதற்கும் பாராட்டுவதற்கான இருப்பிடம் என்பதும் நமக்கு பெருத்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கக் கூடியது இல்லையா?

தனிமனித அதிகாரத்தால் இந்த உலகத்தில் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஒட்டுமொத்த உலகமும் அடைந்துள்ளது. 

அதே சமயம், அன்பினாலன்றி அதிகாரத்தால் ஏதும் செய்ய இயலாது என்பதும் வாழ்வியலின் இலக்கணமாக இருக்கிறது.

பெண்கள் தம் கலைத்திறமைகளையும் பிற பெண்களுடனான ஒருங்கிணைதலையும் தாம் இதற்கு ஆயுதமாக்கவேண்டும்.

பெண்ணுடல் என்பது இயற்கைச் செயல்பாட்டின் மூலமாக இருக்கிறதே அன்றி உடலின் பாவனைகளாலும் வெற்று உடல் நடவடிக்கைகளாலும் ஏதும் செய்ய இயலாது!

பெண்களே, ஆண்களுடன் நாம் அன்பு பாராட்டும் 'பூவுலகமாக' இதை மாற்ற நம்மால் தான் இயலும்! அதை சாதிப்போம்! 

பெண்கள் தின வாழ்த்துகள்!



புகைப்படத்தில் இருப்பவர்: போராளி ஆங் சான் சூ கி