நம் குரல்

எங்களுக்குப் பெண்ணியம் கற்றுக்கொடுக்க விரும்பும் ஆண்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்!




அன்புமிக்க ஆணாதிக்க நண்பர்களே! பெண்கள் குறித்த எல்லா பிரச்சனைகளையும், ஒரே குடுவையில் போட்டு எங்களுக்கு நீதி சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


எழுத்தாளர்கள் சிவகாமியும் பாமாவும், சாதி மறுப்புப் பெண்ணியம் குறித்த அடிப்படைப் புரிதலை பலமுறைகள் அழுத்தமாகச் சொல்லியும், மீண்டும் பாலபாடத்திலிருந்து தொடங்க வேண்டியிருப்பது வேதனை தான்
என்றாலும், வேறு வழியில்லை! எனக்கும் இதைத்தவிர வேறு வேலையில்லை!

தாழ்த்தப்பட்ட பெண்கள் எப்பொழுதும், மூன்று விதமான மனிதர்களால் ஒடுக்கப்படுகின்றனர். வன்முறைக்கு உள்ளாகின்றனர். ஆதிக்கசாதி ஆண்கள், ஆதிக்கசாதிப்பெண்கள் மற்றும் தம் சாதி ஆண்கள். இங்கு அவர்கள் ஆதிக்கசாதிப் பெண்கள் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது!

களப்பணிக்குச் சென்று ஒடுக்கப்பட்ட பெண்களுடன் வேலைசெய்தவர்களுக்கும், அம்பேத்கரை நுட்பமாக வாசித்திருப்பவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த பெண்ணாய் இருப்பவர்களுக்கும் மட்டுமே, மேலே குறிப்பிட்ட, 'ஆதிக்கசாதிப் பெண்கள்' எந்த சாதிய மனோநிலையில், ஒடுக்கப்பட்ட பெண்களிடம், தாழ்த்தப்பட்ட பெண்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பது புரியக்கூடும்!

மடிக்கணியினை வைத்துக் கொண்டு சிந்திப்பவர்களுக்கும், தன் தலைக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பெண்களுக்கிடையேயான பாலியல் அரசியலை புரிந்து கொள்வது கடினம்!

எங்களுக்குப் பெண்ணியம் கற்பிப்பவர்கள் எப்பொழுதும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும் பட்சத்தில், எங்களுக்குப் பெண்ணியம் கற்பிப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஆண்களுடனான பெண்ணுரிமைப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் வெல்வதற்கும் எங்களிடம் இப்பொழுது இருக்கும் கருத்தியலும் அரசியல் தெளிவும் எல்லாவகையிலும் போதுமானது! தலித் ஆண் தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், தலித் பெண்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகளை நாங்களே எங்களுக்குள் அணுகிக்கொள்கிறோம். அதில் உங்கள் நாட்டாமையும் தீர்ப்பும் அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

அம்பேத்கர் புரிந்து கொண்டதை, நீங்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது மிகையாக இருக்கலாம்! இருப்பினும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்குப் பெண்ணியம் கற்பிக்கும் உங்கள் ஆசான் வேலையை நிறுத்தச்செய்வது தான் எங்களின் முதன்மையான பெண்ணிய உரிமையாக இருக்கும்!

















குட்டி ரேவதி

A letter from Koodankulam Women

From

The Women of Koodankulam

People’s Movement Against Nuclear Energy
Idinthakarai
Thirunelveli District
Tamil Nadu




Dear Sister,

We hope this letter finds you well. We are sure that you would have liked to hear the same from us. But today, we cannot say that even to fool you or fool this moment in history.Things are not fine with us anymore here in Idinthakarai, Tsunami Rehabilitation Colony, Koodankulam, Koottapuli, Perumanal, Koottapana, Manappad and so on. The situation in Thoothukudy where our friends fasted inside the Church in support became tense after we lost a dear brother. How can we say we feel good?

Today morning, a sister from nearby Tsunami colony was arrested as she got out of her house. We miss the unifying presence of Xavieramma, the quick and efficient Sundari and the slight Selvi who have been taken to a destination that is unknown. Our homes painstakingly built up with hard earned money and effort have been broken down, with utensils and almirahs thrown out and trampled upon. Many of us are not able to go back there and evaluate what has been lost or destroyed. Our friend Inita was hurt badly. So too, many children. The worst part is the fear that now fills the eyes of our small ones. As all this was happening, many of us were paralysed by the cries of the tiny tots whom we had to carry, drag and run in the sand.

We hear that 60 of our friends from Koodankulam are in jail somewhere. It seems improbable that 20 men who were undergoing treatment for injuries in hospitals have not come back home after being discharged, but that is the truth. We have no drinking water supply since 48 hours and electric supply is intermittent. We are on a 48 hour fast too. The friends from Thoothukudy are ready to bring us rice and other provisions, but they have not been able to reach us because of road blocks. Our children have not gone to school. They have not been bathed or fed properly since the 9th evening. We feel uncomfortable and scared to go to our own homes. Have you ever had that feeling?

Now we are sitting and sleeping in the comfort of each other and the security of the Samara pandal which has been our second home for over an year. But for how long?
Many would say we brought it on ourselves and have no right to complain. But what other way did we have? To agree to the commissioning of the Koodankulam Power Plant? After knowing that it will spew 50 trillion Becquerels of radio nuclides every year into the air and discharge 70 tons of water at temperatures varying between 36- 45 degree centigrade? Would you have felt good to be one of the 2000 living less than 900 metres away from the Plant? After seeing the Fukushima disaster and images from Chernobyl, how could we agree to all this just close by? Many say we have been brainwashed and misled. Yes, ignorance is bliss. But not in this case. We are glad to be informed and to know with clarity about what could be in store for us. This alone has empowered us and strengthened our resolve not to allow the commissioning of the Nuclear Plant.

We hear that instead of immediately withdrawing the police force and initiating a decent dialogue with us, many were talking about the foreign funds and the poor illiterate people that we are supposed to be. At this stage at least when we are back to the wall, please do not refer to us so. We have built up this movement with our daily toil. We are proud of this. We are not afraid of hard, honest work as long as the sea and land is there.

We reiterate our earlier request and demands even now:

1.Please intervene and stop all police force in and around the villages. We do not intend to commit any violence. We know that violence begets violence. We value our life and peace.

2. Please stop the commissioning of the Koodankulam Nuclear Power Plant immediately after engaging in a dialogue with us. We know that it is unsafe and the energy so produced is uneconomical and unnecessary.

3. Please engage in a national level talk on other sources of energy that are in surplus in our country.

4. Release all our friends and family arrested and kept in jails / withdraw all false cases against them.

5. Please ensure that we would be able to live in our homes without fear and that basic amenities like water and electricity will not be disrupted.

Do have the boldness and honesty to come here and see for yourself the beauty and simplicity of our lives. This is the time we need you. Please break the barricades and hindrances that have been created and walk in fearlessly to see us here. Please act and intervene as fast as possible. We cannot afford to lose one more life, scare one more child, break one more house anymore….


Do stand by truth, justice and womanhood


September 12, 2012

regards
Usha

The situation in Koodamkulam is really terrible. My friend who translated this letter request all of us to gather support to this struggle.





































கர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்




ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல்  வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 


மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது! இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.


கர்ணன் என்னும் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளிப்படையான குணங்கள் என கர்ணன் உயர்ந்து கொண்டே போகிறான். சிவாஜி கணேசன் தன் அசாதாரண நடிப்பால் கர்ணன் எனும் ஒற்றை மனிதனுக்கு சற்றும் சளைக்காமல்  பேருருவம் கொடுக்கிறார்.


ஒரு தேரோட்டியின் மகனாக வளரும் கர்ணன், இயல்பில் சூரியனின் மகன். அவனுக்கு இயல்பாக அமைந்த தீரங்கள் எப்படி அவனிடமிருந்து பொய்வேடங்களாலும், சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன என்பதும், தான் பிறந்த குலத்தைக் காரணம் காட்டித் தனக்கு மறுக்கப்பட்ட கலைகளையும் வீரங்களையும் அவன் வேட்கையுடன், சிரமங்களுடன் எப்படி அவன் கற்றுக் கொண்டான் என்பதும், அவையெல்லாம்  அவனுக்கு உபயோகப்படாமல் போகுமாறு பார்ப்பனீய உலகம் எப்படி அவனிடமிருந்து சூறையாடியதும் என்பதும் தான் கர்ணன் என்ற காவிய கதாபாத்திரம்.


சாதியின் துல்லியமான ஒடுக்குமுறை வெளிப்படையாகப் புலனாகிறது. கர்ணன் உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனுடய உயிரையும் தானதர்மங்களால் உண்டான களிப்பையும் கூட விட்டுவைக்காமல் அந்தணவேடம் ஒன்று வந்து வாங்கிச் செல்கிறது.


ஒவ்வொரு நிலையிலும் கர்ணனிடமிருந்து வஞ்சகத்தால் சத்தியத்தின் மேல் சத்தியங்கள் பெறப்பட்டு, அவன் உடைமைகள் எல்லாம் அபகரிக்கப்படுகின்றன. இந்த சூழ்ச்சிகளையும் வஞ்சகங்களையும் அறிந்திருந்தும் கர்ணன் தன் நல்ல குணங்களை இழக்காமல் இருப்பதும், தன் துணிவின் மீது நம்பிக்கை கொள்வதும் கர்ணனைத் தொடர்ந்து கொண்டிருக்கும்  நம்மை அவனுடன் இரண்டறப் பிணைக்கிறது.


பஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும் ஏன் கிருஷ்ணனும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தம்மை மாற்றி மாற்றிப் பேசிச் சமாளிக்கும் போது, கர்ணன் தன் வெற்றுக் கைகளுடன் சந்தர்ப்பத்தின் கைதியாகி நிற்கிறான். போர்க்களத்தில் கையாளப்படும் வியூகங்கள் போல கர்ணன் என்னும் சூரியனின் மகன் மீது, தேரோட்டியின் வளர்ப்பு மகன் மீது, இயல்பிலேயே கொடையுள்ளம் கொண்டவன் மீது, சொன்ன சொல் தவறாதவன் மீது  எல்லா வியூகங்களும் கையாளப்படுவது எந்தச் சிரமமும் இல்லாமல் அற்புதமான வசனங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை அமைப்பு, பார்ப்பனீய அமைப்பைத் தெளிவுபடுத்துவதையே முழு நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.


ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் பாடலும் இசையும் எழும்பி, 'கர்ணன்' எனும் மனிதக் குறியீட்டைப் புரிய வைக்க உதவுகின்றன. பாடல்களில் வரும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்திலும் சாதியை மறுக்கும் நுட்பம் பொதிந்திருக்கிறது. இத்தனைக்கும் வணிகத் தளத்தில் இயங்கி வசூலை அள்ளிய படம்!  சமயம் வாய்த்தால் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்!


குட்டி ரேவதி




Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi



In an interview to  Vani Viswanathan, poet-feminist-activist Kutti Revathi opens up on what prompted her to write poetry, her focus on the woman’s body as a means of fighting against the patriarchal Tamil society and her contribution to the Tamil literary space through her publication Panikkudam.
Kutti Revathi (Dr. S. Revathi) has been an important Tamil voice in the feminist space in India, dealing with the politics of the female body through poetry, her chosen literary form. Some of her poems, such as “Mulaigal” (Breasts), have achieved iconic status all over the world. Mulaigalattracted its fair share of controversy from the conservative Tamil literary society that accused her of being sensationalist and explicit, and threats including that such poets ‘should be burnt’ were prevalent. To offer other young writers a space to air their views, she has founded and edits a feminist journal, Panikkudam, and helps younger women poets to publish their work through her publishing house. Trained in Siddha Medicine, Kutti Revathi is also a filmmaker and engages herself actively in issues of caste and violence against women.
 
Kutti Revathi
A poet, filmmaker, activist, and qualified in Siddha Medicine. How does Dr. Revathi manage to do it all?
The present social condition demands us women writers to be a lot of things at once. Earlier, writers had the privilege to be only writers, because they were from the upper class or upper caste, or similar such sophisticated strata of society. No situation would have asked them to be more than writers. For them, writing was just a hobby. But for us, women writers of the 21st century, especially those from the marginalised communities, the demands are higher: many of us belong to the first generation of those communities getting a command over the language through education. So for us, the need of the hour is to write down all the memories, issues, demands and untold stories that were boiling within us all these years, without a way to express them.
Training to be a doctor in Siddha medicine, for which the syllabus is completely in Tamil, enriched my understanding of the language as a social tool, making it the obvious choice for my poetry. Medicine gave me a complete understanding of women’s biology, and with the help of poetry, I am able to construct the political body that I am allowed to live or to demand in the society.
Currently, I am also working as the scriptwriter for a film that is going to be released in December. I think I need to go beyond this to fully realise the demands of various women’s issues and how I can address them.  There is still a long way to go! I could make my career out of being a medical practitioner, poet, filmmaker and activist all at the same time as I believe they are all interconnected, directly or indirectly. That is how I am able to manage. My focus is simple: we need to liberate women’s bodies from the constraints that the social set up has created.
What would you say was the most important reason you were inspired to write?
The most important reason is the opportunity I got to understand the human body from a medical and scientific perspective, and how the opportunity for me to express the same knowledge of bodily things was denied, thanks to the stigma that surrounds the discussion of a woman’s body in our society.
Though I had been a voracious reader of classic and modern literature, I never thought I would be an active writer, because my passion then was in working as a physician to help women understand their body in the aspects of health and illness.
The reality is that as a woman, you can study well. You can raise yourself to the top-most position in society. But the stigma that is forced on you cannot be erased wherever you go. The need and the urge to fight will be cruising through your body all the time.
Though I was engaging in many kinds of social activities, I realised that only writing could subside the aggression in me and make me calm enough to derive strength to penetrate into the constructs of society to expand the space for women. This made me focus on writing more!
Your poetry is bold, and you do not shy away from openly talking about a woman’s body. What prompts you to take this approach?
Lots of things, but most importantly, it was the studying and travelling I did around the country to understand caste violence against women. It is a form of violence that is more hurtful and prevalent than domestic violence and others forms of violence against women.
And it mostly goes unrecorded. I could see every layer in society engaging in guilt-free violence against women, saying that women belong to the lower caste. But their bodies are exploited for the welfare of the country the most. Their physical power and beauty of their body are all amazing sources of energy. But they are used only as labour! That inspired me to take this approach to write and talk about women’s body.
While people have misunderstood that you write ‘shocking’ things to attract attention to yourself, what are your thoughts about using shock value as a reminder that women ought to have their rightful space in society?
People can call it ‘controversial’ or ‘shocking’. They call it so because our society’s patriarchal structure is very much a Hindu construct. They praise the country with the words Vande Maataram (I bow to thee, Mother), but they will not respect women; they follow the writings in Manu Smriti blindly or uphold aspects of Hindu religion that declare women untouchables by birth. Over centuries, women have not been allowed to utter a word in public, not to learn anything, celebrate their sexuality and body – not to perceive themselves as human beings at all. It is very much a strategy of men of the upper caste who are very used to inculcating Hindu values and practices into the people of the soil. Over time, I have come to understand the various strategies they employ to this end. Using tags such as ‘shocking’ is also a part of this strategy. As the attacks, abuses and conflicts increase, I become stronger. It helps me unravel society’s hidden agenda behind their opposition. It encourages me to continue writing.
Your poetry did certainly conflict with many writers’ opinions on what should and should not be covered in Tamil writing, by a woman that too. One such opinion came from a well-known lyricist in Tamil cinema, himself reputed for the risqué nature of his lyrics. Why is there such a conflict in Tamil – or should I say Indian? – society about how women are perceived vs. how women (are allowed to) perceive themselves? Why is our society so intent on controlling sexuality – be it in writing or the way women dress or their access to public spaces, among other things – when we are ok with seeing it ooze through our media and cinema?
Men – and that particular lyricist you have mentioned – are against women writing because they think we are against culture, Tamil culture in particular. Ironically, Sangam poetry and literature, and women poets of those times, were open about sexuality. Also, they saw their body as the door to the universe and their only asset. Ironically, the Dravidian political leaders and writers who glorify those poets with a political agenda are against the contemporary writing of women.
Cinema and print and visual media have exploited the female body in all possible ways and made it a highly insensitive and sexualised object. Our writings claim the sexual power of women that has been lost through these highly exposed and wrongly-expressed forms. We live in a period where images are extremely important. Images convey highly important information, but they are also very poisoned. Images are given to the society as opium, as Deluze mentioned, so that the society is not awakened. It is the same with dress codes. The country changes culturally as man changes. We cannot wrap eight feet of cloth around our body all through the day and manage our chores or give in to the demands of creative work. I strongly feel that chauvinistic men are alright with exposing the woman’s body in ways they want, but not in the way we want to express. There is a lot of difference between these two.
How do you see your writing as helping you negotiate through our society and its structures of oppression?
Writing definitely helps any woman because language is a very strong tool for the fight against this oppressive society. It can help her discover, explore and construct her own body with all its strengths. Our body is an expanse with abundant power, which women are not allowed to enjoy and experience on any level. This oppression has been driven in subliminally. With language, which can help us find the strength lodged in our own bodies, we can root this oppression out entirely. I maintain that language is the one tool that can liberate women’s bodies. Also important is women’s intellect, which is not at all allowed to evolve or to be utilised for the welfare of mankind. Our thinking has to be allowed to grow by liberating the body from social constraints. There is actually a strong political role to women’s creative writing. It is not direct and immediate. It is very indirect, and very serpentine, but very impactful! I am not who I was when I was not writing. I realise now what happiness is for a woman and what a healthy body and mind mean to a woman like me. Again, I still have a long way to go!
Could you tell us more about your publishing house and your magazine Panikkudam?
I started a publishing house, which I am happy to say has  published more than a dozen poetry collections of upcoming poets, as well as from the popular woman poets of Tamil. In addition to this, I am publishing a magazine called ‘Panikkudam’ (Placenta). Through this magazine, I want to engage young women writers by publishing their early works that are not given space and respect in the public literary floor.
I find publishing itself a form of activism for the writers who write about their bodies. After my ‘Breasts’ anthology, I couldn’t get my poems published anywhere. But the urge to write and publish was so strong in me, and I was desperately looking for an empty white space to fill my poems with. Panikkudam satisfied both my personal and social need.
Actually, it was like planting paddy seedlings in a vast wet field. I always feel rejuvenated when I publish a new, young poet’s collection. It makes me feel connected to the contemporary linguistic world and makes sure I am not dog-eared and worn out.
Finally, do you see a change in attitudes towards women’s writing in Tamil Nadu since when you began?
Yes, very much so! A decade of our poets’ struggle has changed a lot of things in the social and the political domain. Women have been coming into modern writing continuously and they take its values more seriously. Though male writers continue to be against our notions about our body, I can see that the coming generation’s realisation of women’s body and its sexuality are changing in a broader way. Women writers have introduced a political vocabulary that is capable of engaging common women in interpreting oppressive social customs. They will always function like keys to doors that lead us from darkened perceptions that our body is mysterious and evil, into illuminated perceptions that our body is actually an intellectual, biological space. Even a few days back, I got an anonymous letter threatening me to stop writing. But for us women, once the body is awakened through the power of intellect, there is no stopping the creativity, is there?
முலைகள் முலைகள்சதுப்புநிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை….

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.

- குட்டி ரேவதி

Breasts(‘Mulaigal’ in Tamil by Kutti Revathi)Breasts are bubbles, risingIn wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season

Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak

To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal

During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music

From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood

Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over

- translated by N. Kalyan Raman

இன்னும் சில கவிதைகள் - இம்மாத உயிர் எழுத்து இதழில்!


1. தேன் கூடு


இலட்சம் அறைகளாய் பெருக்கம் பெற்றிருக்கிற
தேனீக்களின் கூட்டில் இனிமையின் ரசம் பேருருக் கொண்டு
அடையாய்க் கூடாய் அந்தரக் கிளையில் தொங்குகிறது
கீழே அதை மாந்து நிற்பவனின் நெஞ்சில் 
எட்டாத உயரத்தின் ஓர் ஆசையாய் ஊசலாடுகிறது
இத்தேன் கூட்டைச் சுமந்து அலையும் 
என் பேருவகையை ருசிக்க வந்தவனையும் 
கூட்டில் ஓர் அறையாக்கி அணைத்துக் கொள்கிறது
அவன் மகரந்தத்தையும் தேனாக்கித் தின்கிறது 
அவன் வியர்வையையும் நாநுனியில் இனிப்பாக்கிக் களிக்கிறது
உயிரைக் கோதும் இலட்சம் ஈக்களின் எண்ண மூட்டத்தில்
கூட்டின் அறைகள் பெருகிக் கொண்டே இருக்க
எலும்புகளுக்கு இடையே புகைச்சுருள்களாய்
அவனுக்கான பாடல் கூவலுடன் எழும்புகிறது
உயிரின் இனிய வேதனை சொட்டுச் சொட்டாய்
காலத்தின்  பாறைகளில் துளிர்க்கிறது
அதன் அனுபவத்தை கையேந்திப் பருகிட
அருகில் வந்தவனுக்கு கையில் அள்ளித் தருகிறது
ஒவ்வொரு அறையையும் நிமிண்டும் சுவையின் குறுகுறுப்பில் 
கசியும் தேனை சேகரமாக்கும் கனவுகளின் பேரீசல்கள்
சுழன்று சுழன்று பறக்கும் நினைவின் பெருவண்டுகள்




2. ஆடை



பரந்த நிலவெளியை நீரில் நனைந்த உடையென 
வாரிச் சுருட்டி எழுந்த இவ்வுடலின்
நீல வண்ணப்பட்டாடை அவன் பார்வை விரித்த வானம்
எனைத் தன்னிரு கரங்களால் சுழற்றி இழுத்த விசையில்
எம்முடல்கள் நிலமொன்று விரித்து 
கொத்துக் கொத்தாய்க் கொன்றைப் பூக்கள் முளைத்தெழும்
பூ உதிர்ந்த வெளியில் காற்று சரசரத்துப் போகும்
உயிரைக் கவர்ந்து தந்த முத்தத்தில் 
பாறைகள் மீதாய்ச் சீறியேறி பெருமுழக்கத்துடன் வீழும்
பேரருவி பெருநிலவெளிகளில் பெருக்கெடுத்தோடும்
இடையறா முயக்கங்கள் இடையனின் கிடையோட்டிய
மேய்ச்சல் வெளிகளில் பசும்புற்களைப் பரப்பும்
மழை பெய்த நிலத்தை உழுதுழுது நடந்த
பயிர்க்கால்கள் போல யாக்கையெங்கும் வேரோடிய
ரோமங்கள் அவனைத் தேடித் தேடி அழைக்கும்
நிலவொளி வீசும் வானத்தை 
உடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில் 
உடலின் உயிர்ப்பிராணிகள்
கர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்




3. உப்புக்கண்ணீர்



அந்தக் கடலாகி நிற்கும் அவள் கண்ணீரில்
எத்தனை ஆயிரம் அலைகளாய் எழும்பி நிற்கின்றன
அவளின் வேட்கைகளும் கேவல்களும் 
என்று அவள் அறியவே இல்லை
உப்பு நீரிலும் மடியா தாவரங்களை விளைவிக்கிறாள்
சப்தங்கள் அடங்கிய அவள் உலகத்தில்
புற வெளி அறியாத உயிர்களை உலவ விடுகிறாள்
பாறைகளை மோதி அறையும் அவள் கைகள்
கரையேறத் துடிக்கும் அவளின் மதலைகளை
கடலுக்குள் இழுத்து ஆழம் விளையாட அனுப்புகின்றன
தன் எல்லா பொக்கிஷங்களின் வண்ணங்களையும் மறுத்து
தன்னிடம் ஏதுமில்லை ஏதுமில்லை என கைவிரிக்கிறாள்
அவள் உறங்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்
உப்பாகிக் கரிக்கும் அவளை
இரத்தமாக்கி புரவிகளாக்கி எட்டுத்திக்குகளாக்கி
எழும் சூரியனை
தினம் தினம் பிரசவிக்கிறாள்



4. வீட்டிற்குள் வளரும் மரம்


அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில்
சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று 
நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது
அதை விரித்துப் பார்க்கும் துணிவில் 
வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை
புத்தகம் தன்  இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு
நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி
கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள்
சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி
அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன
காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது
அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது
கூரை இடிந்து போகும் வரை மரம் வளரட்டும்





5. உப்புநீர்ச் சமுத்திரம்



அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத் 
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி 
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது
நீண்ட நேரமாக கடலின் மேலே 
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும் 
கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை





6. நீர்நிலை


கரைவிரிந்த அந்த நீர்நிலை எப்பொழுதோ 
தன்னை ஒரு கண்ணாடிப் பாளமாக்கிக்  கொண்டது
தேக்கத்தையும் குழப்பத்தையும் துறந்த
நிசப்தமான ஓர் ஆடையை அணிந்து கொண்டது
அகண்ட வானத்தை அதன் சிறகு விரிக்கும் மேகங்களை 
நட்சத்திர விழிகளை ஏன் காயும் நிலவைக் கூட
தன்னில் பிரதிபலித்தது தண்ணீராய் நிறைந்தது
ஒரு பருந்து அதன் மேலே பறந்து செல்கையில்
தன் வழியாகப் பறக்க இன்னொரு வானம் தந்தது
சூரியன் முன் தன் பொற்காசுகளை வெளிப்படுத்தினாலும்
எவராலும் களவு கொள்ள முடியாத பொற்கலமென
அது தன்னை ஆழம் ஆக்கிக் கொண்டது
அதன் மீது நீளும் மரங்களின் கிளைகளில் 
ஊஞ்சல் ஆடும் பறவைகள் கால் நனைத்துக்கொள்கையிலும்
ஒரு கற்பனையான மீனை நகங்கொத்திப் போகையிலும்
சிரிப்பின் சிற்றலைகளால் நீர்நிலையை நிறைத்துக் கொள்கிறது
தன் அழகையே தான் பார்த்துக் கொள்ள
தன் அத்தனைக் கைகளாலும் தாமரைகளை உயரே நீட்டுகிறது
அக அழுக்குகளை இரையென தின்னும் மீன்களால்
அதன் அந்தரங்கம் நீரின் அரண்மனையாகிறது
தன் கரை வந்து சுமைகளை இறக்கி வைத்து
ஒரு சிரங்கை நீரள்ளிப் பருகப் போகும் பயணிக்காகத்
தன்னை எதனாலும் பழுது படுத்திக் கொள்ளாமல் காத்திருக்கிறது.









குட்டி ரேவதி



நன்றி: பஷீர், சுதீர் செந்தில்

அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப்பூக்கள்







அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்




என் அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
வேலியின் முட்கம்பிகளுக்கு இடையே 
அதன் கிளைகள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை
அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்களை 
நீர் ஓவியங்களாய் வரைந்திருக்கிறேன்
உடல் வளர வளர அரைப்பாவாடையில் பூக்களும் 
அதிகமாக முகிழ்க்கின்றன
என்னுடல் ஆணாய் இருப்பதும்
நீங்கள் என்னை பெட்டை என்று அழைப்பதும்
பூக்களற்ற உடையாக்குகின்றன என் அரைப்பாவாடையை
நீங்கள் இருந்து விட்டுப் போங்கள்
ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும்
பெண் உடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும்
என் அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்கள்
சுழன்றாடுகையில் பாவாடை காற்றில் மிதக்க
செம்பருத்திப் பூக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
ரகசியங்கள் சருகுகளாய் சரசரக்கின்றன
உடலின் எல்லைகளை பெயர்களால் வரையாதீர்கள்
அல்லது குறிகளால் குறிக்காதீர்கள்
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து 
பறக்கிறது செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
அவ்வுலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்







மாயக்குதிரை



நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர், தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கோ என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை






உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?


ஒவ்வொரு நாளும் அவன் 
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்து கொண்டான்
உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை
பொதிந்து கொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள்

நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து
உடல் ஒரு வானமாக எழுந்தது
அதன் உயரத்திற்கு சிறகுகள் விரித்து
பறந்து கொண்டேயிருக்கும் அனுபவத்தைப்
பேசி பேசியே தன் குஞ்சுகளையும் வளர்க்கிறாள்
இப்பொழுதும் அவள் என்னைக் கண்டால் கேட்பது
என்னிடம் போல் உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?




குட்டி ரேவதி



இக்கவிதைகள், 'ஸ்மைலி' என்கிற லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு....


மடக்குக் கத்தி







இலக்கியவாதிகள் எப்பொழுதும் மற்றவர்கள் குறித்த அவதூறுகளையும் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும்  மடக்குக் கத்திகளைப் போல மடிக்குள் செருகிக் கொண்டே அலைகின்றனர்.


சட்டென்று கத்தியை உருவி முகத்திற்கு நேராக நீட்டி பூச்சாண்டி காட்டி மிரட்டுவதற்கு வசதியாக இருக்கும்.


இவர்களின் 'writer' என்ற முத்திரை, சமூகத்தில் எந்த இடத்திலும் இன்னாருக்கு இன்னது வேண்டும் என்று கேட்டு வாங்கும் முத்திரை ஓலையாகக் கூட பயன்படாது.

அல்லது தனக்கே எதையும் பெற்றுத்தரும் எந்த செல்வாக்கும் கூட இல்லாதது.


இவர்கள் குடும்பத்திலே கூட ஒரு பல்துலக்கும் குச்சிக்கு இருக்கும் பயனும் இல்லாதது. 


இத்தகைய 'சூன்யமான' சமூகச்சூழல்!


ஆனால், ஒண்ணு யோசிச்சீங்களா?  ஒருத்தர் மேல ஓர் ஈர்க்குக்குச்சி குத்தினா கூட பதறி ஒரு காக்காக் கூட்டமே பறந்து வந்து சேரும். 


அப்பத்தான் தெரியும், 


அது வரை பேசின தலித்தியம், பெண்ணியம், தமிழியம், சுதந்திர இயம் எல்லாமே ஒரு இண்டெலக்சுவல் விளம்பர பேனருக்காக என்று! 


கூடுற கூட்டம் எல்லாம் கத்தி சத்தம் போடத்தெரிஞ்ச 'லெளட் ஸ்பீக்கர்' ஆதிக்க இரத்தக் கூட்டமா இருக்கும்! 


மடக்குக் கத்திய மடிக்குள் செருகிக்கிட்டே சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாம் பேசுறவங்கங்கிறதும்!


வழியில பயம், மடியில கத்தின்னு வச்சுக்கலாமா?



குட்டி ரேவதி



பேயோனின் 'நடிப்புச் சூரியன்' கவிதை






பணத்தையும் அறத்தையும் பத்தின குழப்பத்துல நீதி எங்கேயோ இருட்டுக்குள்ள போனதா கவலைப்படுற நட்பு வட்டத்துக்கு..

எப்பவுமே அப்படித் தான அது இருந்துருக்கு? பணமும் அறமும் எதிரெதிரா...!

நாய் வித்தப்பணம் குரைக்குமா? கருவாடு வித்தப்பணம் நாறுமா?

அதே போல அறத்தையும் நீதியையும் வித்தப்பணத்துல அறத்தோட வாசனை வீசுமா?

நீதியோட துடிப்பு தெரியுமா?


சமரசத்துக்கப்புறம் சாக்கடைத்தண்ணீ என்ன? நன்னீர் என்ன? 


பருகினேன் பருகினேன்
என்ற அள்ளிக்குடித்த பாவனை போதாதா?

போயோனின் நடிப்புச்சூரியன் கவிதை மேலே குறிப்பிட்ட விஷயத்தைத் துல்லியமாக சொல்லுது.

கடினமான விஷயத்தை எளிதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.

எனக்குத்தான் சீரணிக்காமல் தொண்டைக்குள்ளேயே இன்னும் நிற்கிறது.






சரி! பேயோன், ஆணா பெண்ணா? பேயோள் என்றால் நெருங்கிப்பார்க்கலாம்.

ஆண் விகுதிகள்  கொஞ்சம் அலர்ஜியில்லையா, எனக்கு?







குட்டி ரேவதி

பில்ட் - அப்






எப்பவும் பில்ட்- அப் பண்ணிக்கிட்டே இருந்தா கட்டிடத்த எப்ப கட்டி 
முடிக்கிறது? 

போய் வேலைய பாருங்க, பாஸு!

!…..ஒங்க வேலையே பில்ட்- அப் கொடுக்குறது தானா?

சாரி! தெரியாமப் போச்சு!

எப்பவும் ஏதோ பில்டிங் கட்டப்போற மேனிக்கே பேசிக்கிட்டு இருக்கீங்களா?

அதாம் இந்த கன்ஃப்யூசன்!




குட்டி ரேவதி
பின் குறிப்பு: இது யாரையும் குறிப்பிடுவது அன்று. முழுக்க முழுக்கக் கற்பனையே!

காலிப் பெருங்காய டப்பா




காலிப் பெருங்காய டப்பாவை ஏன் முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 

வேறு என்ன இருக்கப் போகிறது? 


கடந்த கால வாசனையும், சில முன் முடிவுகளும், நான் இதுவாக்கும் அதுவாக்கும் என்ற அதே பெருங்காய மமதைகளும் தாம்!


இன்று தன்னிடம் எதுவுமே இல்லையென்றாலும், முன்பு தான் கொண்டிருந்த பெருங்காய வாசனையை மட்டும் விடப் போவதே இல்லை!


முன்பொரு காலத்தில் அதில் ஏதோ இருந்ததே என்ற ஞாபகத்தில் இன்னும் ஏன் அதை முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 


இப்பொழுது அது ஒரு காலிப் பெருங்காய டப்பா தானே?




குட்டி ரேவதி

கொம்புகள்








தலைக்கு மேலே கொம்புகள் முளைக்கும் வரை தான்  ஒருவருடன் ஒருவர் முட்டிக்கொள்ள வேண்டும். அதற்குப் பின் தன்னுடைய கொம்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் நன்றாகச் சீவி விட்டுக் கொண்டால் போதுமானது. 

எல்லோரின் நகைச்சுவை உணர்வும் தீர்ந்தே  போய்விட்டது என்பதற்கு சாட்சியாக எல்லோரின் நிலைத்தகவலும் சுழன்று சுழன்று என்னிடமே வருகிறது. 

குப்பையையெல்லாம் பகடி என்கிறார்கள். பிழைப்பை நேர்மை என்கிறீர்கள். சீரியஸ் மட்டும் உயிர் போகக் கதறிக் கொண்டிருக்கிறது.

அப்பாடா, உடையில் ஒட்டிய ஆடையொட்டிகளை உதறிவிடுவதே வேலையாக இருந்த காலம் போயே போய்விட்டது.  அஜீரணத்தால், எல்லோரின் ஜீரண உறுப்புகளும் பழுதாகிக் கொண்டு வருவதை மட்டும் தான் இன்று உணரமுடிகிறது.

எல்லோரும் உறங்கும் மதிய வேளையில் ஸ்பீக்கர் தலைக்கு மேலே அலறிக் கொண்டிருக்கிறது. இரவுகளின் தலைக்கு மேலேயும் கதறிக்கொண்டிருக்கிறது.


குட்டி ரேவதி



அவரவர் முதுகெலும்பின் வலு அவரவர் பயணத்தைத் தீர்மானிக்கிறது!



('நிழல்  வலைக் கண்ணிகள்'   என்ற என் கட்டுரை நூலுக்கு எழுதிய முன்னுரை)





சிந்தனையை எழுத்தாக்குவதிலும் எழுத்தைக் களப்பணியாக்குவதிலும் என்னைத் தீவிரமாய் ஈடுபடுத்திய
படைப்பாளியும் சமூகப்போராளியும் என் தோழியுமான சிவகாமிக்கு.



முன்னுரை


தோழியரே, தோழர்களே! தமிழகத்தில் ஆதிக்கச் சிந்தனை ஓங்கியிருக்க அதே சமயம் அதற்கெதிரான மக்கள் திரட்சி ஓங்கியிருக்கும் காலகட்டத்தில் தான் இதை எழுதுகிறேன். பெண்ணுரிமைக்கான தளங்கள் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக ஒடுங்கிவிட்ட இத்தருணத்தில், அதற்கான காரணங்களை ஆராயுமிடத்து மேற்கொண்ட என் பயணம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது என்பதற்கான வெளிப்பாட்டுப் பதிவே இந்நூல்.



'சாதி மறுப்புப் பெண்ணியத்தை'த் தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்பாதையில் இந்த நூலின் மீது எனது வேறு எந்த நூலையும் விட நான் வலுவான நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருக்கிறேன். கரையானின் புற்றில் வந்து பாம்பு ஏறிக் குடியிருப்பது போல, 'பெண்ணடிமைத்தனம்' அல்லது 'பெண்ணுரிமை' இவற்றிற்காக நாளும் போராடி, உயிரை இழந்து, தம் ஆற்றலை இழந்து, காலத்தை இழந்து, கற்பனைகளையும் கனவுகளையும் இழந்து போயிருக்கையில் அதன் செங்கோலைத் தம் கைகளுக்குப் பறித்துக் கொண்ட ஆதிக்கசாதிப் பெண்டிருக்கும், சாதியின் வழியாக மக்கள் எதிர்ப்புக் குசும்பை அவர்களுக்குள்ளும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண்களுக்கும் எதிரானது என் எழுத்து!



பார்ப்பனப் பெண்கள் மட்டுமல்லாது, பிற ஆதிக்க சாதிப் பெண்களும், தமிழை, மொழியை அதன் பெண்களை வெறுப்புணர்வுடன் கசப்புணர்வுடன் நோக்கி தம் ஆதிக்க மாயைகளில் குதூகலிப்பதற்கான காரணங்களை நான் கண்டு கொண்டேன் என்பதற்கு  இந்த  நூலே ஓர் அசைக்கமுடியாத ஆதாரம். இதில் குறிப்பிடப்படுகின்ற ஆள் நான் இல்லை என்று தன்னை நிரூபிக்க விரும்புபவர்கள் 'தான்' என்னும் சாதி நிறம் படர்ந்த சுய நெருப்பு அகழியைக் கடந்து வர வேண்டும், இந்நூலின் வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மெளனமாகப் புறக்கணித்துச் செல்ல வேண்டும்! அது அது அவரவர் முதுகெலும்பின் வலுவைப் பொறுத்தது!



சிமோன் - தி - போவா, ஜெர்மைன் க்ரீர், ஈவ் என்ஸ்லெர், சூசன் சாண்டாக், காயத்ரி ஸ்பைவேக், ரோஸா லக்ஸம்பர்க், விரிஜினியா வுல்ஃப் என அகில உலகப் பெண்ணிய வாதிகளை எல்லாம் இறக்குமதி செய்த பின்னும் இந்தியாவில் பெண்ணுரியமையை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தமுடியாதபடிக்கு நம் பெண்களுக்கும் இந்தப் பெண்ணிய வாதிகளுக்கும் இடையே  திரை இருந்து கொண்டே இருக்கிறது. அந்தத் திரை என்பது  சாதியம் தான்!


ஆனால், இந்தச் சாதியத்தைப் பெண்ணிய விவாதம் ஆக்குவதற்கு குறைந்தது  இன்னும் நமது ஒரு தலைமுறைப் பெண்களையேனும் காவு கோரும், இந்தியா என்னும் நமது தீண்டப்படாத தேசம்.  சிவகாமியினுடான சமூக இயக்கக் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியன. நீங்கள் எத்தகையதோர் ஆளுமையுடயவராக இருந்தாலும், நீங்கள் ஒடுக்கப்பட்ட, பட்டியல் இனப் பெண்ணாக இருந்தீர்களென்றால், இயக்கத்திற்குத் தலைமை ஏற்கவோ, அல்லது ஒரு கருத்தியலை இயக்கமாக்கவோ தகுதியில்லாதவராகவே கருதப்படுவீர். ஆனால், எந்தச் சமூக விழிப்புணர்வும் அக்கறையும் அற்ற ஓர் ஆதிக்க சாதிப்பெண், குறைந்தபட்சம் தன் பாலியலைக் கொண்டே கூட அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் அங்கீகாரத்தையும் கோரமுடியும். பிற பெண்கள் கண்களில் மண் தூவ முடியும்!



பல சமயங்களில், ஆதிக்க சாதி ஆணுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் புரையோடிப் போன தம் மன அதிகாரத்தையும் அவலத்தையும் தமது ஆதாயங்களாக முன் வைத்து ஒடுக்கப்பட்ட பெண்களை இன்னும் அதிகமாய் ஒடுக்கியுள்ளனர், ஆதிக்க சாதிப் பெண்கள். ஒரு சிறிய குழுவாக இயங்கும் போது கூட அவர்கள் மனதின் அடியில் கசியும் ஆதிக்க மனதை, வன்மத்தை, ஏய்ப்பை, அழுக்கை அவர்களால் கண்காட்சியாக ஆக்க முடியாமல் இருந்ததே இல்லை. 'அதிகாரப் பகிர்வு' என்று வந்து விட்டால் அவர்களின் செயலூக்க நரம்புகள் அதிக விசையுடன் செயல்பட்டு, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூட கபளீகரம் செய்து விடும்!



கடந்த வருடங்களில், 'சாதி மறுப்புப் பெண்ணியத்தின்' மீது நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டு நான் எழுதிய     கட்டுரைகள் இவை! தனி மனித இயக்கத்தின் தொனி இவற்றின் அடியில் ஓங்கியிருப்பதை உணரமுடிந்தாலும் அது எனக்கு விருப்பமில்லாத, வருத்தமான  ஒன்று தான்!  ஆனால், இந்த நூலின் மீது ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்! என் பாதை இது தான் என்பதைத்  தெளிவாக்கியும் வைத்திருக்கிறேன்! ஆகவே இதனால் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் உங்கள் எல்லோரின் இலக்கிய அங்கீகாரப் பந்தல்களிலும் ஏதோ ஒரு மாலையோ, புகழுரையோ அல்லது விருதோ கூட வேண்டாமெனச் சொல்லிக் கொள்கிறேன்! உங்களின் நவீன இலக்கியப் பந்தயத்தில் நானும் உங்களுக்குச் சமதையாகப் போட்டியிட்டு உங்கள் அங்கீகாரத்தில் பங்கு கேட்பேன் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை! அஞ்சவே தேவையில்லை!



இந்நூலில், சாதியை மறுக்கும் என் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க்கவிதையில் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் கட்டுரைகள் என்று மூன்று வகைக் கட்டுரைகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தப் பின்பு, இதை இன்னும் விரிவான நூலாக்குவதற்கான எழுத்துப் பணியில் ஈடுபடவேண்டும் என்னும் உற்சாகம் பிறந்திருக்கிறது! 
செய்வேன்!



இந்த நூலில் இதுவரை ஒலிக்கும் என் தனிமனிதக் குரல் மட்டுமே  இந்த நூல் உருவாக முழுப்பொறுப்பும் இல்லை! வெவ்வேறு காலத்தில், என் வெவ்வேறு பயணத்தில் இன்று பெயர் நினைவில்லாத நூற்றுக் கணக்கான பெண்கள் தம் எழுச்சியினால் என்னைத் தீண்டி விட்டிருக்கின்றனர்! என்னைத்
தூண்டி விட்டிருக்கின்றனர்!   அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்! 'வம்சி பதிப்பகத்தின்' 
கே.வி. சைலஜாவிற்கு என் அன்பும் நன்றிகளும்! ஓர் எழுத்தாளராய் இருந்து எழுத்தாளர்  மீது பதிப்பகங்கள் செலுத்தும் அதிகார துஷ்பிரயயோகத்தின் வடிவத்தையும் மூர்க்கத்தையும் மிக நுட்பமாய் நான் அறிவேன்!பதிப்பகங்களின் அதிகார வேட்டைக்கு இடையில், தனியொரு பெண்ணாய் நின்று அறம் பாராட்டுவது எளிது அன்று! போராட்டத்தில் களைக்காது  தன் சுவாசத்தின் உஷ்ணத்துடன் நூல்களை நெய்து வழங்கும் சைலஜாவின் கைகளால் இந்த நூல் உருப்பெறுவது என்பது நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது! அவரது வேட்கையின் அளவிற்கு அவர் இன்னும் மிக நீளமான பயணத்தைத் தன் எதிரே கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது! அவருக்கு என் வாழ்த்துக்களும்! இந்த நூல் எழுத்தாளர் சிவகாமிக்கு! அவரினும் என் மன எழுச்சிக்குப் பொருத்தமானவர் எவரும் இல்லை! அவர் அன்பு, நிறைய பெண்களுக்குப் போலவே எனக்கும்  நிறைய செய்திருக்கிறது! என்னிடம் அவருக்காக இந்த நூல் மட்டுமே இருக்கிறது!



என் கட்டுரை மொழியை ஒரு பொருட்டாகக் கருதி என்னுடன் இணைத்துக் கொண்ட நண்பர்களையும் நான் இவ்விடம் நினைத்துக் கொள்கிறேன். 'கீற்று ரமேஷ்', இனியொரு யோகன் அசோகன், பொன்னி பதிப்பகத்தின் வைகறை, ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், பொதியவெற்பன், தமிழ் ஸ்டூடியோ அருண், இணைய நண்பர்கள் சாத்தப்பன்  மற்றும் வேல்கண்ணன் ஆகியோருக்கும் என் நன்றிகள்!



என் மின்னஞ்சல் முகவரி kuttirevathi@gmail.com
எழுதுங்கள்!


அன்புடன்,
குட்டி ரேவதி

2.1.2012











  

சென்னையில் அணு உலை எதிர்ப்பு மாநாடு, பி.26, 2012








அன்பார்ந்த தோழர்களே,



கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தலைமுறைகளைக் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் போராட்டத்தின் நீதியை, இந்திய அரசு அவதூறு செய்து வருகிறது. பொய் வழக்கு, அச்சுறுத்தல் மூலம் அப்போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது.


கூடங்குளம் அணு உலையால் கிடைக்கும் மின்சாரத்தைவிட, அது உருவாக்கும் பேரழிவு தமிழகத்தையே உருக்குலைய செய்து விடும். இலட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை பாழ்படுத்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

இந்த அபாயத்தை நமக்கு எச்சரித்து, நம்மையும் தமிழ்நாட்டையும் காக்கப்போராடும் அணு உலையை சுற்றியுள்ள கிராம மக்களுடன் நாமும் தோளோடு தோள் நின்று போராட வேண்டும்.



இப்படிக்கு,
அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்




பெண் என்ற ஒற்றை அடையாளம், ஆதிக்கச் சிந்தனைப் பெண்களுக்கானது!








http://koodu.thamizhstudio.com/nerkaanal_4.php













(‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்.)


நேர்காணல் செய்தவர்கள்:
ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ்


நன்றி: 'புறனடை' இலக்கியச் சீரிதழ், 'தமிழ் ஸ்டுடியோ' இணைய இதழ்

கதம்பம்











உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி 
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.






குட்டி ரேவதி

'மாமத யானை' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை 

ஈருடல் மேவும் அறமே, காதல்!


  

என், ‘முத்தத்தின் அலகு’ காதல் கவிதைகளின் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை: 




 தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததற்காக விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்ட நிலக்கோட்டை வட்டம்  மலைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவிற்கும் அவரது  காதலர் பாலச்சந்தருக்கும் இந்நூல்!





காதல், ஓர் அதிகாலையில் பூவில் துளிர்த்திருக்கும் ஒற்றைப் பனித்துளியைப் போலத்தான் பூக்கிறது. அது காதல் என்று இனம் கண்டறிய எந்த அளவுமானியும் தேவைப்படவில்லை தான்! ஆனால், அது உடலுக்குள் ஒரு யானையைப் போல நுழைந்து கொண்டு துவம்சம் செய்து, நமது யதார்த்தத்தின் காடுகளை அழித்தொழிக்கும்! மீண்டும் நாம் சூரியனையும் சந்திரனையும் முறையாய்ச் சந்திப்பதற்குள் ஆண்டுகள் ஓடிவிடும்! முத்தங்கள் சிறகு முளைத்து பால்வெளியில் கோள்களாகச் சுழலத் தொடங்கியிருக்கும்! வேறென்ன செய்வது? காதலில் மட்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கவே முடியாது!



இந்த உலகை இன்னும் இன்னும் அழகாய் மாற்றுவது இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு தான்! மனிதனின் மகத்தான அனுபவங்களில் ஒன்று அது. கண்ணுடன் கண் நோக்கி, ஒவ்வொரு பார்வையாய் உள்ளிறங்கி மனதின் ஆழ்கடல் நீந்த விட்டு, தானும் நீந்தப் பழகி உடலின் அறங்களைப் பாடும் பாராட்டும் காதல் மனித உயிரின் இன்றியமையாத உணவு!



உடலை செல்போல அரிக்கும் அன்றாடத்திற்கு நடுவே, மனித உடலை எதிர்த்திசையில் அழைத்துச் செல்கிறது, காதல்! காதல் என்றால், முத்தமிட்டுக் கொண்டே இருத்தலும், ஊடலும் கூடலும் கொள்ளலும், தழுவலும் விலக நோதலும் மட்டுமே இல்லை! கருத்தொருமித்தவராய் இருந்து உலகின் ஒற்றை சமூக அலகாய் பெண்ணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் மாறும் பயணம் தான் காதல் என்று அறிய போதுமான காதல் இலக்கியங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்!



மனித உடலில் பீறிடும் ஹார்மோன்கள் காதலைப் பாடுகின்றன! அவை தாம் கோபிக்கவும், வெறுக்கவும் கூட செய்கின்றன! ஹார்மோன்கள் இரத்தத்தில் சுழன்றோடும் பூக்கள் போலும்! ஆனால், தோட்டத்தில் நட்டு வைத்த செடி பூத்ததா என்று அறிய தினம் தினம் நாடி ஓடிப்போய் அதைப் பார்வையால் வருடிக்கொடுப்பதைப் போல காதல், மகத்தான ஒரு வருடலை சக மனிதனுக்கு பரிசளிக்கும் பக்குவத்தை அளிக்கிறது!



மனிதன் பயிலவேண்டிய அறங்களில் ஒன்றாகவே காதலும் இருக்கிறது! சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் முரண்டு பிடிக்கும் ஒரு காட்டு மிருகமாகவும் அது இருப்பதால் தான் அதை காலந்தோறும் வெற்றி கொள்ள முடியாமல் திணறும் ஒற்றை மனித சமூகம் பெருகிக் கொண்டே இருக்கிறது! காதலில் உடல் என்பது இருவருக்குமே அடிப்படையானதோர் உடைமையாக மாறுகிறது.  பேதத்தின் உடைகளைக் களைந்து கொள்கிறது. எந்த வயதானாலும், எந்தப் பின்புலமானாலும், எந்த மொழியானாலும் இருவரையும் சமநிலைக்கு இழுத்து வந்து மகிழ்ச்சியை பரப்புவதில் காதலுக்கு நிகரானதோர் உணர்வு இல்லவே இல்லை!



காதல் என்று சொல்லி இருவர் இணைந்த பின் சமூகத்தின் நடுவில் இருக்கும் குன்றின் மீது ஏறி நிற்கும் விளக்குகளாகி விடுகின்றனர்! அவர்கள் அங்கே நின்று எரியவேண்டும் எனும் போது தான் காதலின் சுடர் விளங்கும்! அவர்கள், சமூக உற்பத்தியில் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது! அது வெறுமனே, ‘உயிர்களை’ ஈன்று தருதல் மட்டுமே அல்ல! மாறாக, எல்லா விதமான அறிவு உற்பத்திக்கும் தம்மைத் தொடர்ந்து செலுத்துதலும் ஆகும்! வீடு, குடும்பம், பெண்டு என்று வேலி போட்டுக் கொள்கையில், அந்தக் காதலின் விளக்கு, ‘குடத்தில் இட்ட விளக்கென’ ஆகிறது!



ஈருயிர்கள் இணைந்து பகிர்ந்தும் பகர்ந்தும் இந்தப் பூமிக்குச் செய்ய வேண்டியவற்றை நினைவூட்டத் தான்,  உடலில் ஊற்றெடுக்கிறது, ‘ஹார்மோன்’ என்ற வேதி மது! ’காதல்’ என்பது அன்பினால் ஆன வெறும் உணர்வு மட்டுமே அன்று! சமூக உற்பத்திக்கு ஆதாரமான உறவும் கூட! ஈருயிர்கள் இணைவதால் உண்டாகும் அதிகமான சாத்தியப்பாடுகளை, அன்பு தான் சாத்தியப்படுத்துகிறது! இது ஒரு நுட்பமான இலக்கணம்! சேர்ந்து வாழும் போதும், இயங்கும் போதும், பொதுவான அனுபவங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொள்ளும் போதும் மட்டுமே உணரக்கூடியது!



’காதல் போயின் சாதல்’ என்று பாரதி சொன்னது கூட, இக்காதல் இல்லாத மனிதன் செத்துப் போனதற்குச் சமானம் என்ற அர்த்தத்தில் தான்! இதற்கு மேல் காதல் என்றால், எழுதியோ உரையாடியோ உணர்ந்து கொள்ள இயலாது! காதலித்தும், காதலிக்கப்பட்டும் வாழ்ந்தால் தான் அது புரிதலுக்குச் சாத்தியப்படும்! காதலென்று ஆகும்!


*



என் காதல் ஐந்திணை வெளிகளிலும் நிகழ்ந்ததாகவே எனக்கு நினைவு இருக்கிறது! மலைகளிலும், காடுகளிலும், ஆற்றின் படுகைகளிலும், கடல் வெளிகளிலும், வயற்புறங்களிலும் என உறவையும் உடலையும் செழுமையூட்டிக் கொள்ள பயணித்துக் கொண்டே இருந்தது!  இன்னும் சொல்லப்போனால் யானைப்பசியுடன் அது திரிந்தது! காதலின் ஐந்திணைத் தன்மைகளையும் நுகர்ந்தது!




தாய் தந்தை ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்ததைக் கண்ட நினைவுகள் மனதைப் பீடித்திருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்! அதன் அலைக்கழிப்பில், காதலின் தீரங்களைக் கண்டறியும் வேட்கையுடன் நான் எந்தவித மனத் தடையுமில்லாது இருந்தேன்!



ஓர் ஆழமான உறவு, உடலுக்கும் மனதுக்கும் அதன் அகவெளிகளுக்குள்ளும் நிகழ்த்தும் ரசவாதம், பின் எப்போதும் நம் செயல்கள் எல்லாவற்றிற்கும் உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது என்பதை இப்பொழுது உணர்கிறேன்! சரியான பருவத்தில் மழை பெய்வது போல காதலும் நிகழவேண்டும்! அது கனமழையாக நம் உடல் நிலத்தில் ஊடுருவ வேண்டும்! பின், வாழ்வியலுக்கான போராட்டங்களில் ஈடுபடும் சவால்களை ஏற்பது மிகவும் எளிதாகிவிடுகிறது!



நான் காதலை ஒரு சமத்துவமான உறவுக்கான அழைப்பாகவே பார்க்கிறேன். காதலின் உறவில் பங்கு பெறும் இருவரையும் நீளமான வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய தியாகங்களுக்குத் தயார் செய்கிறது!  நான் அந்தப் பாதையில், நெடுஞ்சாலையில் பலவிதமான போராட்டங்களையும், தயக்கங்களையும், குழப்பங்களையும் கடந்து வந்து சேர்ந்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்! வாழ்க்கையில் பாலைவனத்தில்  இன்று காதல் நிரந்தர மகிழ்ச்சிக்கான ஓர் ஊற்றாக இருக்கிறது.



*


நவீன வாழ்க்கையும் சமூகக் கட்டமைப்புகளும் வேறு மாதிரியான அனுபங்களைக் காட்டுகின்றன. நவீன தொடர்புசாதனங்கள் உரையாடலுக்கான வாய்ப்பை எளிமைப்படுத்திவிட்டதால், ‘தொடுதல்’ உணர்ச்சியை மிகைப்படுத்தியிருக்கின்றன! உடலைப் பேரமாக்கியிருக்கின்றன! மனதின் அதிகாரத் தேவைகளை உடல் வழி சூழ்ச்சிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன!



எப்பொழுதும் சைபர் ஸ்பேஸைக் கடந்து நீளும்  கைகளை வளர்த்துக் கொண்டோம் நாம்! அதே சமயம், உடலை பணயம் வைத்து எதையும், எந்த ஆதாரத்தையும் ஈட்டும் அறமற்ற செயலிலும் ஈடுபடத்துணிகிறோம்! இரு உடல்களுக்கு இடையே நிகழும் காதல் உரையாடலும் அதன் சூழல், சமூகம், இன்ன பிற மனிதர்கள் சார்ந்த அறங்களும் இன்று மிக முக்கியமாகப் படுகின்றன. உடலை அதிகாரமாகவும், உறவை ஈனமான செயலாகவும் கருதும் சமூகத்தில் மனித நாகரிகமும், பண்பாடும், இயற்கையின் நெறிகளுமே கூட மண்ணாய்ப் போகும். காதல் இல்லாத மானுடம், வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளைத் தொலைத்துத் தரையில் வெற்றுத்தாளாய்க் கிடப்பதைப் போல கிடக்கும்!       



நிறுவனங்களை நம்பும் மனித இனமும் சமூகமும் காதலை எதிர்த்தும் நிராகரித்துமே வந்திருக்கின்றன. மனித பரிணாம வளர்ச்சியின் முளையைக் கிள்ளியெறிய முனையும் மனித மனம் தான், காதலில் ஈடுபடுவர்களை சமூக ஏற்றத் தாழ்வைக் காரணம் காட்டி, விரட்டுகிறது, அடிக்கிறது, மரத்தில் கட்டி வைத்து எரிக்கிறது! ஆனால், இதனாலெல்லாம் காதல் அணைந்து போவதில்லை! அங்கு அது கனலாய்க் கனன்று பின்னுமோர் மனத்தைப் போய் பற்றிக்  கொண்டு ஆட்டுவிக்கத் தான் செய்யும்! மனிதனும் மனிதனும் பூமியில் வேறெதற்கு?



சாதியை அதிகாரமாக்கி அதன் பொருட்டு, தாம் ஈன்ற பிள்ளையையே எரித்த, கொன்ற சம்பவங்கள் நெஞ்சின் கலக்கத்தை அதிகப்படுத்துகின்றன. என்றாலும், அத்தகைய சாதி கடந்த காதலில் ஒன்றி, துணிவுடன் போராடிய இளம் நெஞ்சங்களுக்கானது இந்தக் கவிதைகள். ஆழி செந்தில்நாதன் தான், என் காதல் கவிதைகளைத் தொகுக்கும் ஆலோசனைகளுடன் வந்தார். அவரின்றி இந்நூலுக்கான சாத்தியமே இல்லை. அவருக்கு என் நன்றிகள்! ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’, ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’, ‘உடலின் கதவு’, ‘யானுமிட்ட தீ’ ஆகிய என் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடனும், புதிய கவிதைகளுடனும் வந்திருக்கிறேன்! 



’காதல் கவிதைகளை’ச் சேகரிப்பது என்பது விநோதமான பணி எனத் தோன்றியது! முத்தங்களைச் சேகரிப்பதற்கு நிகரானதொரு பணி தான்! ஒரே சமயத்தில்  பலவிதமான உணர்வுகள் என்னைப் பீடித்தன என்று தான் சொல்லவேண்டும். காதல் என் சுய அளவில் பிரமாண்டமான காலக்கட்டத்தையும் ஆவியையும் எடுத்துக்கொண்டது என்றாலும் அது குறித்து எனக்கு எந்தக் குற்றச் சாட்டுகளும் இன்று இல்லை.



அது என்னளவில் உரையாடலுக்கான ஓர் எழுச்சியாக இருந்திருக்கிறது அல்லது, பேண முடியாது இருந்த மெளனத்தை, ‘காதலின்’ பெயரால் பத்திரப்படுத்துவதாய் இருந்திருக்கிறது! ஓர் உறவு மலரும் போதே அதை உன்னிப்பாய்க் கவனிக்கையில் அதன் ரகசியங்கள் எல்லாம் புலர்ந்ததும், அதன் மீது இருக்கும் பிரமிப்பு தொலைய அது காதலாக அல்லாமல், தோழமையாக எல்லாவிதமான சமூக இயக்கத்திற்கும் அடிப்படையான உறவாய் மாறிவிடுகிறது! அம்பேத்கர் சொன்னது போல, நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட என் பாதையில் பெண்  ஆண் என்ற பாலிமைப் பேதத்தை என் அளவில் வெகு நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கும் போது பெண் – ஆண் நட்பு அல்லது உறவின் மீதான ஈர்ப்பே கூட  மெல்ல கனிந்து, ‘காதலின் சுடரென’ நெஞ்சில் எரியும்!



செழுமையான காதலின் வண்ணமும் வெளிச்சமும் அடங்கிய காதலின் திண்மை அடங்கிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன். அவற்றின் கூதல், உங்களுக்கும் உங்கள் உங்கள் காதலை நினைவூட்டிக் களிப்பூட்டட்டும். உங்களை காட்டுப் பறவைகளாகட்டும். காற்றின் புரவிகளாக்கட்டும். மத யானைகளாக்கட்டும். பெருவெள்ளமாய் இழுத்துச் செல்லட்டும். சூரியனாய் உங்கள் தலை மேலே நகரட்டும். தனிமைக்கு ஒரு நிலவைப் பரிசளிக்கட்டும். உங்களை வேறு பருவகாலங்களுக்கு இழுத்துச்செல்லட்டும். வேறென்ன? முத்தத்தின் அலகுகளால் ஒருவருக்கொருவர் அன்பைப் புகட்டிக்கொள்ள காதலின் தேவைக்கான காலம் இது!




குட்டி ரேவதி
15.11.2011



நன்றி: ’ஆழி’ பப்ளிஷர்ஸ்