நம் குரல்

நிலவின் பேரொளி




வானத்தின் பெருவெளியைப் 
பயணித்துத் தீராத ஒற்றை நிலவே 
தீரத்தின் குறியீடு நீ நிலாவே
நீ நிறைத்து வைத்திருக்கும் மெளனம்

இசையின் துல்லியத்துடன்
என்னுள் இறங்குகிறது
நம்மிடையே எவ்வளவு அகண்ட
காலமும் வாழ்வும்
உன் பேரழகில் மதி தெளியும்
மதி அழியும் மதி உயிர்க்கும்
என் ஒரே எதிரொளி நீ
நீர் நழுவும் விரிந்த நதியின்
ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு
சத்தமில்லாமல் நீந்துகிறாய்
எத்தனை காலத்தின் ரகசியங்களும்
நினைவுகளும் தின்று தீர்த்த பின்னும்
பறவையின் சிறகசையும் நகர்வில்
இன்னும் பயணம் தொடர்கிறாய்
இன்று என் மிக அருகில் என் எதிரொளி
பேரொளியுடன்!






குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: