நம் குரல்

தனிமை


தனிமையும் மகிழ்ச்சியும் ஒன்றாக வாழ்வதில்லை.
ஆனால், தனிமையும் நிம்மதியும் ஒன்றாகத்தான் 

உறங்குகின்றன.


காதல், தனிமையை விரும்புவதில்லை.
தனிமை, காதலை எதிர்ப்பதில்லை.
தனிமைக்கு நாவுகள் கிடையாது என்று நம்புகிறோம்.
நம்முடன் பேசுவோரின் நாவுகளை எல்லாம் கடன் வாங்கிவருகிறது, தனிமை.
தனிமைக்குக் கடிகார முட்கள் கிடையாது.
காலத்தின் தோழி, எப்பொழுதும் தனிமை தான்.
எலும்புகளில் உறைந்திருக்கிறது தனிமை.
எலும்புகளைத் தசையுடன் தின்னும் மண்ணாக வருகிறது காலம்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: