நம் குரல்

நேபாள பூகம்பம்

திருச்சி வந்திருக்கிறேன். அம்மா முழு நேரமும் வானொலியின் அருகில் அமர்ந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேபாளம் குறித்த செய்திகளை, கவலையுடனும் அக்கறையுடனும் கேட்கிறார்.
தற்செயலாகத் தான் நாம் எல்லோரும் உயிருடனும், நம் உறவுகளுடனும் இருக்கிறோம் என்பதை உணரநேரும்போது இப்பூமியில் நம் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையும் புரிகிறது.
நேபாளத்தின் சில வீடியோ பதிவுகளைக் காண நேரிட்டது. இந்தப்பூமியில், இந்தக்காலக்கட்டத்தில் வாழ, மனிதனுக்கு அசாதாரணமான துணிவு வேண்டும் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் அறிந்தாலும், மனிதன் மாறுவதாக இல்லை. இலட்சோப இலட்ச வருடங்கள் மனிதனை ஆட்கொண்ட, அடிமைகொண்ட மனித மரபணுக்களின் குரல்களைப் பரிசீலிக்க அவனால் முடிவதே இல்லை.
தன்னைத் தவிர எதுவுமே முக்கியமில்லை என்று நம்புவது இந்தக்காலத்தில் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை என்றும் தோன்றுகிறது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: