நம் குரல்

அருண் ஷான்பாக்






அருண் ஷான்பாக் பற்றி நிறைய பதிவுகள். எல்லாவற்றையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே அழுகாச்சிப் பதிவுகள். கொஞ்சம் எரிச்சலாகவும்,  சங்கடமாகவும் கூட இருக்கிறது.

ஒரு பெண்மீதான பாலியல் வன்முறையை கூட, இன்னும் நாம் சரியாக அலச, ஆராயக் கற்றுக்கொள்ளவில்லை. 

பிரச்சனை இது தான்: தனி நபர் மீதான பிரச்சனையாக, தனி நபர், ஒரு பெண்ணின் மீது காட்டிய வன்முறையாக மட்டுமே பார்ப்பதால் தான், இது இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது.  ஒரு குறுகிய பார்வையுடனேயே முடிந்துபோகிறது.

இந்தப்பிரச்சனையை, நாளுக்கு நாள், மிகவும் தவறான இடத்தில் இருந்து கொண்டே பார்ப்பதால், இந்த வன்முறையும் நாளுக்கு நாள் அதிகமாகத் தான் போகிறது. 

இந்த சிஸ்டம் அப்படி. சாதிய ஏற்றத்தாழ்வுகளால் விளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வன்முறையை வெளிப்படுத்தும் எல்லா தூண்டுதல்களையும் கொண்டிருக்கிறது.

'எந்த வகையிலும் வன்முறை கூடாது!. ஏனெனில், இந்தியா என்பது அகிம்சை இந்தியா' இதுவே ஒரு புரட்டு. 

வன்முறை கூடாது, ஆனால், வன்மங்களை அமைதியான, திட்டமிட்ட நடவடிக்கைகள் வழியாகச் செயல்படுத்தலாமாம். இது, வன்முறையினும் கொடுமையான வன்முறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

சிந்தனைகளில் வன்முறை இருக்கலாம், செயல்களில் இருக்கக்கூடாதாம். 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட வன்முறைகள் மீதே நம் பரிவும், அக்கறையும் குவிவது என்பது, மனிதனின் வாயூரிஸ்டிக் மனநிலையின் எதிரொளி தான். 

உண்மையில், அருண் ஷான்பாக்கை விட, 'வெஜிடபிள்களாக' இலட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் வாழ்ந்து மடிகின்றனர். 

அருண் ஷான்பாக்கின் விடயத்தில், அறம் மீறாமல் இருக்க அந்த மருத்துவமனை முயன்றது ஒரு சிறப்பான நிலைப்பாடு.

ஆனால், இது வெறுமனே ஆண் X பெண் பிரச்சனை என்று பார்ப்பது ஓயாதவரை, பிரச்சனைக்கும் தீர்வில்லை. இப்படி, 42 வருடங்கள் ஒரு பெண்ணை 'வெஜிடபிளாக' வைத்துக்கொள்வதும் தீர்வில்லை.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: