நம் குரல்

மனித உடல் பற்றிய அறிவு!


நாம் அறிந்திருக்கும் மனித உடல் பற்றிய நம் அறிவு போதாது.
ஆனால், முழு வாழ்வும் இந்த உடலிலேயே கழிக்கவேண்டியிருப்பதால், உயிர் கொண்ட உடல் இயங்குவதை அறிந்திருப்பது மருத்துவர்களின் பணி மட்டுமே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமாகும்.
தனி மனித வாழ்வியல், உடலைத் தாக்கும் வகையறிந்து வாழ்வது இன்றைய சூழலில் மிக மிக அவசியமாகிறது.
மாசு சூழ்ந்த சுற்றுச்சூழல், போட்டி மனப்பான்மை, இலட்சிய வெறி கொண்ட வாழ்வு, தறிகெட்ட வாழ்க்கை முறை, அவசரமான பாதை, தன்னை வருத்துதல் போன்றவை முதலில் தாக்குவது உடலைத் தான். உடல் வழியாக, எல்லாவற்றையும் தான், நம்மைச்சுற்றியுள்ள எல்லோரையும் தான்.
உடல் இயங்குவதை அறிவது, எல்லா மனிதனுக்கும் தேவையான அடிப்படை அறிவாகவே இருக்கிறது. ஆனால், நம் நினைவில், அது 'ஊத்தைக்குழி' என்றும் 'மாயை' என்றும் சொல்லப்பட்டு உடல் அழித்தல் பெரிதும் போற்றப்படும் ஒன்றாக இருக்கிறது. இது ஓர் அடிமை அறிவு.
உடல் காத்தேன், உயிர் காத்தேன் என்பதே இன்றைய நம் முதன்மையான கடமையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
அவரவர் உடலைப்பற்றி அறிந்திருத்தலும், அதைப் பேணலும், போற்றலும், ஊக்கப்படுத்துதலும் நம் அன்றாடக் கலையாக மாறவேண்டும்.
தமிழ் மருத்துவம், இதையே மீண்டும் மீண்டும் பல்வேறு திசைகளில் நமக்குச்சொல்ல முயன்றது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: