நம் குரல்

ஜெயலலிதா கைது



இதுவும் பாரபட்சங்களை எழுப்பும் நீதியே!

குற்றத்திற்குப் பின்பு 18 ஆண்டுகள் வாழ்க்கையை அனுபவித்த பின்பான ஒரு தண்டனை.

வாச்சாத்தியிலும் இதுவே நிகழ்ந்தது. குற்றம் இழைத்தவர்கள் நிறைய பேர் தண்டனையை அனுபவிக்காமல், தாங்கள் செய்தது குற்றம் என்றே நம்பாமல் இறந்து போனார்கள்.

இந்தியாவின் நீதி முறை சிக்கலானது. இந்த நீதியும் கூட, சுப்ரமணியசுவாமிக்கு இருக்கும் அதிகார அழுத்தத்தால் சாத்தியப்படுத்திக் கொண்டது.

ஓநாய்கள் பெற்றுத்தரும் நீதியை, நமக்கு ஆதாயமாகப் பார்க்கமுடியாது. எப்பொழுதுவேண்டுமானலும் நம் கைகளிலிருந்து பறிக்கப்படும்.

மேலும், இந்தியா முழுதும் இவ்வாறு நம் மக்களை அட்டைகளாக உறிஞ்சி வாழ்பவர்கள் ஏராளம். நம் மக்கள் இழந்த நல்வாழ்வை எப்படி மீண்டும் பெறமுடியும்.

இன்னும் சிக்கலான எதிர்காலத்தைத் தமிழகம் சந்திக்க இருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழர்கள் மீதான வெறுப்பு மனோபாவத்தின் தொனி நிறைந்திருக்கிறது பிஜேபிகளிடம்.

கருத்தியல் புரிதலும், அரசியல் தெளிவும் ஒருமுகப்பட்ட செயல்பாடும் சரியான தொலைநோக்கும் இல்லை எனில்,
நம்மை நாமே எதிர்காலத்தில் கூடக் காத்துக்கொள்ளமுடியாது என்று தோன்றுகிறது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: