நம் குரல்

எனக்குப் பிடித்த கவிதை





பாலை





பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.



-கவிஞர் பிரமிள்

1 கருத்து:

சாகம்பரி சொன்னது…

கண்கள் சொல்லும் கனவை கால்கள் கலைத்துவிட்டனவோ? பல சமயங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூட முடியவில்லை.