நம் குரல்

யோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்







கார்த்திகா என்ற இதழியலாளர் இப்பத்திக்கென என்னுடன் நேரடியான இரு உரையாடல்களை மேற்கொண்டார். இப்பத்தியை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ பதிவு செய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பும் காலமும் அகண்டது.



இதைப் படித்ததும் இரண்டு முக்கியமான விடயங்கள் தோன்றின. இப்பத்தியில் உள்ளீடுகளும் வெற்றிடங்களும் நிறைய இருந்தாலும் இதில் கருத்துருவமாக இடம்பெறாமல் போன கவிஞர்கள் தாம் என் சிந்தையை மிகுதியாய் அலைக்கழிக்கின்றனர். அந்த வரிசை மிக நீளமானது என்று அறிவேன். ஒன்று.



இரண்டு, தங்களை நெருக்கியடித்துக்கொண்டு முன்வைக்காமல் திரைக்குப் பின்னே தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களும் இருக்கையில் இக்கவிதைச் செயல்பாடு ஓர் இயக்கத்தினும் மேலானது என்பதை என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மங்கை போன்றவர்களின் மேம்போக்கான கருத்துகளால் கவிதை எழுதுபவர்களுக்கும் கவிதை வெளியில் இயங்குபவர்களுக்கும் எந்தப் பாதகமும் இல்லை. இப்பத்தியின் நோக்கத்திற்கு எதிராக அவர் மொழிந்திருப்பது வேடிக்கை. தமிழகத்தில் பெண்கள் இயக்கமே இல்லை என்பதை அறியாத ஒரு பெண்ணியவாதியாக அவர் இருப்பதும் வியப்பு. இது ஒரு பெரிய விவாதத்திற்கான தளம்.



தமிழகத்தில் பெண்கள் உதிரிகளாகத் தாம் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் சமீபத்திய எல்லா நிகழ்வுகளும் ஏன் தோல்விகளைக் கண்டுள்ளன என்பதற்கான ஆராய்ச்சியும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில்’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: