நம் குரல்

மாமத யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமத யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கதம்பம்











உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி 
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.






குட்டி ரேவதி

'மாமத யானை' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை 

வம்சி வெளியீடாக என் இரு நூல்கள்









                        வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக என் இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 
                        'மாமத யானை' - கவிதைத் தொகுப்பு
                        'நிழல் வலைக் கண்ணிகள்' - பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு

                        புத்தகக் கண்காட்சியில், வம்சியின் கடை எண்: 313 -ல் இந்நூல்களை 
                        வாங்கிக் கொள்ளலாம் என நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!















குட்டி ரேவதி