நம் குரல்

கண்ணீர்

அந்த அறை கொந்தளித்தது
தரையிலிருந்து எழும்பிய காற்று நெளிய
திரைகளை விரித்த பின்னும்
ஒளி சீறிக்கசிந்து
அலைகள் எழும்பியடங்கிய வண்ணம்
கரையில் எவருமிலாததாய் அறை
உறைந்த நாற்காலிகள்
வியர்த்து ஒழுகின
அந்தரத்தில் பறவைகளற்ற
ஓர் இறுக்கமான வானத்தை
எவ்வளவு நேரம் சுமப்பது?
பின்னொரு மழையை அழைத்தேன்
அறை குளிர




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: