நம் குரல்

கருவறை

கருவறையின் இருட்டில்
ஒளிர்கிறது எரியும் தனிமை
தீண்டா இருளும்
தனித்து விட்ட சடங்கும்
பின்னிரவு நேரமும்
மூழ்கடிக்கும் நிசப்தத்தில்
பீடத்தோடு தரித்தது வேர் ஆணி
பூமிக்கிழுத்த நின்றமேனி கனத்தில்
எதிரில் வந்து நின்றோனின்
கண்ணொளி வாயில் தாண்டி இழுக்க
கரம் பற்றி கருவறை கடக்க நினைத்தேன்
அவனோ என்னோடு நிலைப்பானில்லை
என்னையும் அவனோடு அழைப்பானில்லை
இரவிலும் சூரிய பீடம் வேகிறது
தொடை பிளந்து வழிகிறது
தேக்கி வைத்த சினக்குருதி
‘கருவறைக்குள் முளைக்காதே
கண் திறந்து சிசுவே
தெய்வமற்றுப் போகட்டும் இக்கருவறை’யென்று
நிலை வாயில் தாண்டினேன்
கருவறையைச் சூன்யமாக்கி





குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: