நம் குரல்

நண்பர்களே, ஆண்கள் தினமாம் இன்று!






வாழ்க்கையில் வெவ்வேறு நற்பங்குகளை ஏற்ற எல்லா ஆண்களுக்கும், ஆண்களாக இருக்கும் பொறுப்பேற்றமைக்கும் என் வாழ்த்துகள்.

உண்மையில், இத்தகைய இறுக்கமான சமூக அமைப்பில், ஆளுமையும் பண்பும் குன்றாத ஓர் ஆணாக இருப்பது என்பது சாதாரண விடயமே இல்லை.

தனித்தன்மையை எப்படிக்காப்பாற்றுவது என்பதற்கும் எங்கே சமூகப்பொறுப்பு எடுப்பது என்பதற்கும் இடையே மெல்லிய நூலிழை தான் விடயம்.

இதில் குழம்பிப்போன பல ஆண்களை நம் அன்றாட வாழ்விலும் பொதுவெளியிலும் காண நேரிட்டாலும், மோசமான 'ஆண்' என்று யாருமே இல்லை. அல்லது, அப்படியான மோசமான ஆண்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்ததில்லை.

ஒருவேளை, அப்படியான ஆண்களாகத் தம்மைத்தாமே வரிந்துகொண்டவர்கள் கூட, நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்வதில் உண்டாகும் நம் பயணத்தின் தகிப்பு தாங்காமல் தாமே உதிர்ந்தும் போய்விடுவார்கள் என்பது என் நம்பிக்கை.

பால்நிலை சமத்துவம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அன்று. அப்படி நம்பிய ஆண்கள், இயல்பாகவே 'பெண் வெறுப்பை' தம் தேர்வாகக் கொண்டதும் ஒரு கெடுவாய்ப்பே.

ஆனால், இந்த எழுத்தின் பொதுவாழ்வில் அருமையான ஆண்களை எல்லாம் காண நேர்ந்திருக்கிறது, என்பதே நான் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புவதும்.

தான் பிறந்த குடும்பம் என்பதை மட்டுமே ஒரு சமூகப்பாதுகாப்பிற்கான அடையாளமாகக் கருதியிருந்தால், நல்ல ஆண்களை நான் கண்டிருக்க முடியாது.

குடும்பத்திலிருந்து பொது வாழ்வு நோக்கி நகர, நகர வன்முறையை ஓர் அடையாளமாகக் கருதாத ஆண்களையும், சமூகப்பொறுப்பான ஆண்களையும், ஆளுமையான ஆண்களையும் இயல்பாகவே சந்திக்க நேர்கிறது.


நீங்கள் அப்படியிருந்தமைக்காகவும், இருப்பதற்குத் தம்மைத்தாமே பணித்தமைக்காகவும் உங்கள் எல்லோருக்கும் என் நல்வாழ்த்துகள்!

குட்டி ரேவதி

1 கருத்து:

யோகியின் தேடல்கள் சொன்னது…

சில நிலைபாடுகள் ஒத்து போகின்றன