நம் குரல்

புத்தகக்கண்காட்சி -2



அருள் எழிலன் குறிப்பிட்டிருப்பது போலவே, இந்த வருடம் புத்தகக் கண்காட்சி படுதோல்வி தான்! இதற்குக் காரணம், புதிய படைப்பாக்கங்கள் பெருமளவில் வராதது தான்! இதற்குக் காரணம், அரசு முன்பு போல நவீன இலக்கியப்படைப்புகளை நூலகங்களுக்கு வாங்கிக்கொள்ளாதது தான்! தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, இச்சமூகம் ஓர் அறிவுச்சமூகமாய் இருப்பதில் எந்த உவப்புமில்லை.

பெரும் நிறுவனங்களாய் இயங்கும் பதிப்பகங்கள் தம் விருப்பப்படி நூல்களை கண்டபடிக்கு வெளியிட, கவனமாயும் சமூக அக்கறையுடனும் குறிப்பிட்ட எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்கி வெளியிடும் சிறு பதிப்பகங்கள் இந்த முறை கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இன்று மீண்டும் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று வந்தேன். வருடத்திற்கு ஒரு முறை புத்தகக்கண்காட்சியில் மட்டுமே சந்திக்க முடியும் நண்பர்களையெல்லாம் பார்த்துக் கைகுலுக்கி மகிழமுடிகிறது. மற்ற படிக்கு, கண்காட்சியில் ஈக்கள் தாம் சுற்றித் திரிகின்றன. கருத்தரங்க வெளியில் ஒலிக்கும் காட்டுக்கத்தல் சொற்பொழிவுகளைப் பத்துபேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம் சமூகத்தின் முக்கியமானதொரு பண்பாட்டு வெளியெங்கிலும் ஈக்களே ஆடிப்பாடித் திரிகின்றன!







குட்டி ரேவதி

1 கருத்து:

giri4evr சொன்னது…

வணக்கம், i recently watched neeya naana which you have participated " is dressing is the reason for womens sexual harassment?" , the view which you have projected is amazing, i am sure many people will start realizing. tks to you.

i am eager to watch your short film uyir ulai, where can i get that,

kindly reply me to giri4evr@gmail.com

Thanks and regards
Arunagiri C
9626251927