நம் குரல்

வம்சி வெளியீடாக என் இரு நூல்கள்









                        வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக என் இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 
                        'மாமத யானை' - கவிதைத் தொகுப்பு
                        'நிழல் வலைக் கண்ணிகள்' - பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு

                        புத்தகக் கண்காட்சியில், வம்சியின் கடை எண்: 313 -ல் இந்நூல்களை 
                        வாங்கிக் கொள்ளலாம் என நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!















குட்டி ரேவதி

புறனடை - சீரிய இலக்கிய இதழ்





புறனடை

மேலும் ஒரு இதழ் வருகிறது
என்ன தேவைகள் குறித்து,
நேற்றும் இது வந்ததா,
எந்த இடைவெளிகள் நிரப்ப?
எதன் நகல், நகலின் நகலின்..
அதன் இதன் எதன் சாயல்
வெறும் பெயர் மாற்றமா ?
யாருடைய சொல்லாக அது இருக்கும்.
காலத்தின் மீது என்ன அசைவுகள் கருதி ?
எந்தக் குழு ? என்ன நிலைப்பாடு ?
சாயமிழந்த ஒரு காலத்தின் உற்பத்தி விளைவா
சந்தைச் சூழலின் ஒரு வெற்றுப் பக்கமா
அதன் உள்ளீடு எதனால் நிரம்புகிறது ?
ஒரு சிறு கல்லெறிதலா, விலகலா, ஊடறுப்பா, உப பிரதியா
பிரபஞ்ச இயக்கத்தில் மெல்லிய சலனங்கள் பரவவிடும்                                                          
ஒரு பட்டாம்பூச்சி விளைவா .
வரலாற்றின் இடைவெளிகளில்                                                                                              
எப்போதும் நிரம்பியிருக்கும் மௌனமா..



ஆசிரியர் குழு: பிரவீண், ராஜ், ரவிச்சந்திரன், அருள், ஆர். அபிலாஷ், செல்வம், தேவா

தொடர்பு எண்: 9710014218 /9884772864
மின்னஞ்சல்: puranadai@gmail.com
விலை: ரூ.15/-









'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா















'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா 6.1.2012 அன்று சென்னையில் சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. ஆட்களைக் கவர்வதற்கான எந்தத் தந்திரமும் இன்றி, முழுமையும் இலக்கிய விழாவாகவே நடத்திக்காட்டியதற்கு நாதன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அஜயன் பாலாவிற்கும், முழு விழாவையும் ஒருங்கிணைத்திருந்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்!

முக்கியமான விஷயம், நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள் எல்லோரும் நூலை முழுமையாக வாசித்து அதுபற்றிய நுட்பமான தம் கருத்துக்களைநேர்மையாகப் பதிவு செய்தது. அழகிய பெரியவன், யாழன் ஆதி, தமயந்தி, பாலை நிலவன், பிரவீண், அஜயன் பாலா ஆகியோர் அவ்வாறு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு கட்டுரை வாசித்தும் உரையாற்றியும் நூலுக்கான பரந்த முக்கியத்துவம், அதற்கான சமூகத்தொடர்பு, அரசியலைப் பதிவு செய்தது உண்மையிலேயே உள மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. திரை ஆளுமைகளையும், அரசியல் ஆளுமைகளையும் அழைத்து இலக்கியங்களை அணுகுவதற்கானமேடை அமைத்துக்கொடுப்பது என்பது எனக்கு எப்பொழுதுமே ஒரு நேர்மையற்ற செயலாக இருந்திருக்கிறது. அதை இந்த விழாவின் வழியாக, இதில் கலந்து கொண்டோர் அனைவர் வழியாகவும் மீறியிருக்கிறோம்! நிகழ்விற்கு வர விருப்பம் இருந்தும் இயலாமல், வெளியிலிருந்து உறுதுணையாக நின்ற நண்பர்கள் அனைவருக்கும் கூட என் நன்றிகள்!

நூலை எழுத்தாளர் அழகிய பெரியவன் வெளியிட, கவிஞர் அனார் பெற்றுக்கொண்டார். எனக்கு ஜீவநாதன் வரைந்தளித்த ஓவியமொன்று பரிசளிக்கப்பட்டது!கவிஞர் தமிழ்நதி முழு நிகழ்வும் கலந்து கொண்டு சிறப்பித்தார்!

'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழாவிற்குப் பின் இது தான் நான் எழுதிய நூல் ஒன்றுக்கு நடக்கும் வெளியீட்டு விழா!ஆனால், இதில் கலந்து கொண்டோர் இந்நிகழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட விதமும், அது குறித்த தம் பார்வையைப் பதிவு செய்த அழகும், நேர்மையும்இந்நூலை ஒரு பொதுநூலாக ஆக்கியுள்ளது! இதைத்தான் நான் அதிகமும் எதிர்நோக்கினேன்! எல்லோருக்கும் மிக்க நன்றி!



குட்டி ரேவதி


'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா






எந்த அதிகாரத்தோடும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டுடியோ! இந்த இயக்கத்துடன் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட 
பெண் கவிஞர்களின் விடுதலை மொழியை அலசும் தொகுப்பு! 
உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தையும் மொழியையும் முன்னிறுத்தும்
நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான 
பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு!





தமிழ் ஸ்டுடியோவில் நான் தொடராக எழுதிய, 'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள்' நூலாக வெளிவருகிறது,  இன்று! இது, கடந்த பத்தாண்டுகளில்,  என்றென்றுமாய் கட்டமைக்கப்பட்டு வந்த ஆண்மைய இலக்கியப் புரிதலை தம் கவிதை மொழி வழியாகத் தகர்த்தப் பெண் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் நிறைந்தது. தமிழ் ஸ்டுடியோ, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. எழுத்தாளர் அஜயன் பாலாவால் தொடங்கப்பட்டு இயக்கப்படும், 'நாதன் பதிப்பகம்' நூலை பதிப்பித்திருக்கிறது.  எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பாலை நிலவன், யாழன் ஆதி, தமயந்தி, அஜயன் பாலா, நர்மதா, தி.பரமேசுவரி மற்றும்பிரவீண்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.  இன்று மாலை 6  மணி அளவில் எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.  இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று அதை முழுமையடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!


`கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா'













எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ

கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட பெண் கவிஞர்களின் மொழியை உடலரசியலை அலசும் தொகுப்பு

நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு




நாள்: 06-01-2012

வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு 

இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்



சிறப்பு அழைப்பாளர்கள்



அழகிய பெரியவன் 
பாலை நிலவன் 
யாழன் ஆதி 
தமயந்தி 
அஜயன் பாலா 
நர்மதா 
தி. பரமேஸ்வரி 
ப்ரவீண்
குட்டி ரேவதி 

நூல் வெளியீடு: நாதன் பதிப்பகம் (அஜயன் பாலா)



நன்றி: தமிழ் ஸ்டூடியோ