நம் குரல்

'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா






எந்த அதிகாரத்தோடும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டுடியோ! இந்த இயக்கத்துடன் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட 
பெண் கவிஞர்களின் விடுதலை மொழியை அலசும் தொகுப்பு! 
உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தையும் மொழியையும் முன்னிறுத்தும்
நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான 
பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு!





தமிழ் ஸ்டுடியோவில் நான் தொடராக எழுதிய, 'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள்' நூலாக வெளிவருகிறது,  இன்று! இது, கடந்த பத்தாண்டுகளில்,  என்றென்றுமாய் கட்டமைக்கப்பட்டு வந்த ஆண்மைய இலக்கியப் புரிதலை தம் கவிதை மொழி வழியாகத் தகர்த்தப் பெண் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் நிறைந்தது. தமிழ் ஸ்டுடியோ, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. எழுத்தாளர் அஜயன் பாலாவால் தொடங்கப்பட்டு இயக்கப்படும், 'நாதன் பதிப்பகம்' நூலை பதிப்பித்திருக்கிறது.  எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பாலை நிலவன், யாழன் ஆதி, தமயந்தி, அஜயன் பாலா, நர்மதா, தி.பரமேசுவரி மற்றும்பிரவீண்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.  இன்று மாலை 6  மணி அளவில் எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.  இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று அதை முழுமையடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!


கருத்துகள் இல்லை: