நம் குரல்

கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!



நான் அறிந்த தயாரிப்பு நிறுவனங்களும், நட்பு நிலை தயாரிப்பு நிறுவனங்களும் கூட,
படம் தயாரிக்கக் கதைகளும், அதைச் சொல்லும் இயக்குநர்களும் வேண்டுமென்கிறார்கள்.

இயக்குநர்களும், கதையாசிரியர்களும் நாம் அறிந்த நிறுவனங்களுக்கே கூட கதை சொல்ல முன்வருவதில்லை.
அவர்கள் சொல்லும் ஒரே காரணம், கதையைக் கேட்டுவிட்டு,
கதை பிடிக்கவில்லை அல்லது வேறு காரணங்கள் சொல்லிவிட்டு, பின் அதே கதையைப் படம் எடுக்கும் 
திரைத்துறையின் 'வியாபாரத் தந்திரத்தை'த் தம்மால் சமாளிக்கமுடியாது என்பது தான்.

நம் வாழ்க்கையைய் திருடியது போக, நம் மக்களின் கதைகளையும் திருடி, நம் நாயகர்களாக மாறும் 'திடீர் நாயகர்களால்' மெல்ல மெல்ல நம் சமூகத்தின் நீதியும் கொல்லப்படுகிறது.
இவர்கள் நாயகர்களாக மாற, நம் கதைகளா?
நம் திரைத்துறையின் 'கதைப்பஞ்சமும்', 'ஏமாற்றுவித்தையும்', பணம், புகழ் மற்றும் அதிகாரத்தின் மீதான பேராசையில் எழுவது.
பணத்தை வைத்து மொத்த திரைத்துறையையும் அசைத்துவிட முடியும், 
ரசிகர் கூட்டத்தை வைத்து எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள முடியும் 
என்ற கட்டப்பஞ்சாயத்து மனநிலை, திரைத்துறையையும் காவுகொடுக்கச்செய்துவிடுமோ 
என்ற எண்ணம் தோன்றுகிறது.

உண்மையில், மொத்த இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் இதற்கு எதிராக வெகுண்டெழுந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். 
இந்நிலை, இனியும் தொடராமல் இருக்கும்படியான, 
வழக்கத்தைத் திரைத்துறையில் கொண்டுவரவேண்டும்.

கதையைத் திருடி, படம் செய்து வெளிச்சத்தில் பதுங்கிக்கொள்ளல், மக்கள் துறையான திரைத்துறையைச் சூறையாடுதலாகும்.
சொந்தமாக ஒரு கதையை உருவாக்கமுடியாதவர்கள், திருடிப்படம் எடுக்கும் கலை வறட்சி உள்ளவர்கள், ஏன் படம் எடுக்கவேண்டும்?
கதை இல்லாமல், மற்றவர்களின் கதையைத் தாம் படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளல், முதுகெலும்பு இல்லாமை.
கதை எவருடையதோ, அவருடையதே திரைப்படமும்!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: