நம் குரல்

யானுமிட்ட தீ




அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்

முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்

மெல்ல திரளும் உதிரப்பெருக்கைக் கடலென்றும்

கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்

உங்களுக்கான பிரபஞ்ச நீள்வட்ட வலயத்தை

மறுக்கிறாள் மெளனிக்கிறாலென்பதைக் கூறிக்கொள்கிறேன்

உடலெங்கிலும் ஆயுதம் புதைத்த வனமாகியவள்

என்றறியாமல் அம்பெய்தின உங்கள் கைகள்

வழியெங்கும் சமிக்ஞைகளால் அவளெழுப்பிய வேட்டை அம்புகளால்

கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய வெடிமருந்துருண்டைகளால்

உம்முடல் வெடித்துச்சிதறலாம் எதிர்பாராத ஒரு காலையில்

தொடைகளுக்கு இடையே விரியும் கானகப்பாதை

பால்வெளியாக நீளும் என்றுஅவள் வானம் வரைந்தாலும்

உருண்ருண்டு ஓடும் கோள்களின் கண்ணியில்

எந்நேரமும் சிக்கிக்கொள்ளலாம் உமது குறிகள் என்றாலும்

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே

இரை கண்ட காட்டு மிருகமொன்றின் பாய்ச்சலுடன்

திமிறிக்கொண்டிருக்கும் யோனியை பதுக்கிவைத்திருப்பவள்

முற்றா முகிழ்முலைகளாகி மரங்கள் பூத்துக்கொட்டும்

பிரதேசமொன்றை நிர்வாண உடலுமாக்கியவள்

‘யானுமிட்ட தீஈதென்று சூரியனைச் சுட்டும்போது

நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே!




குட்டி ரேவதி

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

உண்மைய சொல்லனும்னா புரியல!
இன்னும் நிறைய வாசிச்சு பழகனும்னு தோணுது!

இளைய கவி சொன்னது…

அருமை கலக்கிட்டீங்க