நம் குரல்

உடலைப் பற்றிய குறிப்புகள் - 2




உள்ளிருந்து எழும் குரல்கள்

நிறைய குரல்களை தன்னுள் சேமித்து வைக்கின்றது உடல். அல்லது ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற தனது மெய்யியல் தேவைகளை மட்டுமன்றி மெய்ஞ்ஞான தேவையினையும் கூட தன்னுள்ளிருந்து எழும் குரலால் தெரிவிக்கின்றது. பசி, காமம், கழிவை வெளியேற்றுதல் அல்லது உடலுக்குத் தேவையான இச்சைகளைத் துறத்தல் என இன்ன பிற தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு கேட்கும் போதெல்லாம் நாம் அதற்கு இணங்குகிறோம் அல்லது அக்குரல்களுக்கு செவிமடுக்கிறோம். உடலின் சங்கடங்கள், ஆனந்த, துயரக்குரல்களைக் கேட்கும் பயிற்சி, தனது உடலையும் உடலின் இயங்கியலையும் புரிந்துகொள்ளும் பண்பையும் திறனையும் வளர்க்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்புக்கொள்கையைச் செயல்படுத்த உடலுக்கும் உதவுகிறது. ஒவ்வாமையைத் தவிர்க்க முடிகிறது. பெண் உடலில் குழந்தை பிறப்பதற்கான உந்துதலைக் கூட கேட்கமுடிகிறது. குரலற்ற உடலென்று ஏதுமில்லை. தனது குரல்களை ஓர் உடல் எவ்வளவுக்கெவ்வளவு பொருட்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு எளிமையானதாகிறது உறவு. மனித உடலின் அழைப்பையும் மறுப்பையும் எழுச்சியையும் உந்துதலையும் பால்நிலையால் பேதப்படுத்தி அரசியல்படுத்தாதபோது அது இயற்கையின் பேராற்றல் உடையதாகிறது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: