நம் குரல்

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 2

எனது முந்தைய பதிவின் தொடக்கமாய் கவிஞன் பிரமிளின் கீழ்க்கண்ட கவிதையைக் கண்டெடுத்தேன். படித்துப் பாருங்களேன்..

பாரதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

“வெள்ளம் போல்

கவிப் பெருக்கும்

கலைப் பெருக்கும்

மேவுமாயின்

பள்ளத்தே

விழுந்திருக்கும்

மனிதர் எல்லாம்

விழி பெற்று

பதவி கொள்வாரே

என்ற பாரதியாரே

உமக்கு

நன்றாய் வேண்டும்!

வெள்ளம் போல்

சினிமாக் கவிபெருகி

ரோதனைச் சுழலாகி

அமைதி வெளிபடர்ந்த

கழனி நிலப்பரப்பை

காடு மேடுகளை

கம்பி வைத்து எட்டி....

மெளனக் குகையினுள்

தனிமைக் கருணை

சிதற

இயல்புணர்வில்

விஷநீர் ஏறி உள்ளம்

பேயாகி அலற...

உமக்கு வேண்டும்!

கபந்தனின்

இடையறாப்பசி

இடையறாச் சினிமா

வாந்தி வித்தையாய் மாறி

செலுலாயிட் கலை

சுருள் சுருளாய் கக்கி

கொட்டகை நிரம்பி

விழி வழிய..

உமக்கு

இது வேண்டும்

இன்னமும் வேண்டுமா?

வாரா வாரம்

கிளு கிளுத்துத் தொடர்கிறது

செக்ஸ் மேனி

சோழ ராணி.

இன்று

பள்ளத்தே

விழுந்திருக்கும்

மனிதர் எல்லாம்

பாதாளமே

பதவி என்றும்

மாலைக் குருட்டுக் கண்

மேலும் இருள,

விரல் நுனித் தடவலே

விளக்கு என்றும்

தலைகீழாய் குழி தோண்டி

தம்மைப் புதைத்தபடி

மலையேறுகிறோம் என்று

மார் தட்டுகின்றார்கள்.

கருணை முகில் கலைந்து

எட்டாத உச்சியில்

ஒதுங்கிக் கொண்டிருக்கிறது

உச்சி இரவின்

மதியம் தகித்து

மண்மாரி பெய்கிறது

புலன் காணாப்

புயல் வெளி

கத்தாழை நிழல் தேடி

பதுங்குகிறது...

திருப்தியா?

-பிரமிள் (மகத்துவ இலை, விமர்சனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து..)

1 கருத்து:

Shangaran சொன்னது…

அருமையான பதிவு.

நட்புடன்,
சங்கரன்.
http://shangaran.wordpress.com