நம் குரல்

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்

நீதியரசர் கிருஷ்ணய்யர் 99வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணய்யர் விருதுகள் 2013
உயிர்வலி – சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட திரையிடல்
23/11/2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு
சர். பிட்டி தியாகராயர் அரங்கு, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர்

கிருஷ்ணய்யர் விருதுகள் 20131915ம் ஆண்டு பிறந்து மெட்ராஸ் மாகாணத்தின் சமூகநீதி வழக்குரைஞராக பணியாற்றி,பிறகு கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டதுறை, உள்துறை, நீர்வளம் மற்றும்மின் துறை அமைச்சராக பதவிவகித்து; பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்றநீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். தன்னுடைய99வது வயதிலும் நீதி, மனித நேயம், மனித 
உரிமைகள் என தொடர்ந்து போராடிவரும்மரணதண்டனை எதிர்ப்பு போராளி கிருஷ்ணய்யரின் 
பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவதுவருடமாக கிருஷ்ணய்யர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட 
இருக்கின்றார்கள்.
கிருஷ்ணய்யர் மரணதண்டனை எதிர்ப்பு விருது
மரணதண்டனையை தத்துவார்த்தரீதியாக எதிர்த்து அதன் ஒழிப்பிற்காக பங்காற்றி; இந்தஉயரிய 
நோக்கத்தின் நியாயத்தை மக்களிடையே பரப்பி வரும் செயலுக்காக வழங்கப்படுவது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் மும்பை வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மரண தண்டனை எதிர்ப்பு விருது திருமதி மகாசுவேதாதேவி – 
வங்காள எழுத்தாளர்
கிருஷ்ணய்யர் மனித நேய விருது
இனம், மொழி பூகோள எல்லைகளை கடந்து மனித நேயத்தை மட்டுமே உயர்த்தி பிடிக்கும்உதாரண 
செயல்களையும், அச்செயலாற்றியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும்விருது 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர் நடிகர் மம்முட்டி
2013ம் ஆண்டுக்கான கிருஷ்ணய்யர் மனித நேய விருது
திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் – சமூக சேவகர்
செங்கொடி விருது
கொண்ட நோக்கத்தில் வழுவாமை, தியாகம் வீரம் எனப் போற்றுதர்குரிய குணங்களைவெளிப்படுத்தும் செயற்கரிய செயல்களை செய்த பெண் செயல்பாட்டாளர்களுக்குவழங்கப்படும் விருது. 2012ம் ஆண்டின் விருதை பெற்றவர்கள் சென்னை வழக்கறிஞர்கள்வடிவாம்பாள்அங்கயற்கண்ணி 
மற்றும் சுஜாதா
2013ம் ஆண்டுக்கான செங்கொடி விருது
இடிந்தகரை பெண்கள் சுந்தரிசெல்விசேவியரம்மாள்
உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்படம்
மரணதண்டனையை கருப்பொருளாக கொண்டு மாறிவரும் சமூக கலாச்சார சூழலில்இத்தண்டனை   குறித்து ஆழமாக அலசி ஆராயும் ஒரு ஆவணப்படம். இந்த ஆவணப்படம்பேரறிவாளன் என்ற ஒரு மரணதண்டனை சிறைவாசியின் வாழ்வை ஆதாரமாக கொண்டுஅதனூடாக பயணித்து இத்தண்டனையின் 
தேவையை கேள்விகுள்ளாக்கும் ஒரு வரலாற்றுஆவணம். பல வெளிவராத வரலாற்று உண்மைகளை 
உள்ளடக்கி இருக்கும் இந்தஆவணப்படம் நீதித்துறை வல்லுனர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், 
சமூகவியலாளர்கள்,திரைத்துறையினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்க திரையிட்டு 
வெளியிடப்படஉள்ளது. 
மரணதண்டனை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகும் இந்நிகழ்வில்அனைவரும் பங்குகொள்ளவும்
மேலும் இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் மரண தண்டனை 
எதிர்ப்புகூட்டமைப்பு தங்களை அன்புடன் அழைக்கின்றது




மரணதண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு – 9884021741, 8883930017

நிகழ்சி நிரல்
நேரம்நிகழ்வு
4.00 வரவேற்புரை
4.15தலைமையுரை – விடுதலை ராஜேந்திரன்
4.45விருதுகள் அறிமுகம்விருது பெறுவோர் அறிமுகவிருதுகள் வழங்குதல்
5.30உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் ஆவணப்பட வெளியீடு
படத்தை வெளியிடுபவர் பாரதிராஜாஜனநாதாதன் ஆவணப்படத்தை பெற்றுக்கொள்பவர் ஒளிவண்ணன்.
அமீர்வெற்றிமாறன்சேரன்
6.15தேநீர் இடைவேளை
6.30திரைப்படம் வெளியீடு
7.30சிறப்புரை
இரா.நல்லகண்ணு
பழநெடுமாறன்
வைகோ
புலமைபித்தன்
ஜி.ராமகிருஷ்ணன்
தொல்.திருமாவளவன்
செந்தமிழன் சீமான்
கோ..மணி
கோவை இராமகிருஷ்ணன்
பண்ருட்டி வேல்முருகன்
மருத்துவர் கிருஷ்ணசாமி
தனியரசு
முனைவர் ஹாஜா கனி
தெஹலான் பாக்வி
பெமணியரசன்
தியாகு
ஹென்றி டிபேன்
9.50நன்றியுரை – அன்பு தனசேகரன்


'மாற்று' என்பதும் 'மெயின் ஸ்ட்ரீம்' என்பதும்!




அடிப்படையில் முற்றிலும், 'மெயின் ஸ்ட்ரீம்' அழகியலுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான பண்பாட்டையும் இலக்கியத்தையும் தோழமையையும் பின்பற்றி வந்தவள். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக என் எழுத்தும் சிந்தனையும் அதுவாக இருந்திருக்கிறது. இந்த 'மாற்று' என்பதன் மீது முழுமையான ஈர்ப்பும், அக்கறையும் இருந்ததாலேயே என்னால் எழுத்தாளராக இருக்கமுடிகிறது என்றும் நம்புகிறேன்.

தொடர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், களப்பணி என்று இயங்கிய போதும், இந்த 'மாற்று' விஷயங்களை ' 'மெயின் ஸ்ட்ரீமு'க்குக் கொண்டு சேர்க்காமல் நம் நோக்கம் நிறைவேறாது என்பதைப் புரிந்து கொண்ட போது, என் நம்பிக்கைகளும் வழிமுறைகளும் இன்று மாறிவிட்டதாகவே நம்புகிறேன்.

என்ன இருந்தாலும், 'கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்', 'மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்', 'சாதி மறுப்பு வாழ்வியலை ஆதரிக்கும் போராட்டம்' என மாற்றுச்சமூகத்தினர் எப்பொழுதும் போராடிக் கொண்டிருப்பதாகவும், அது பொதுச்சமூகத்தின் அக்கறைக்குள் அடங்காததாகவும் இருக்கிறது.

பல சமயங்களில், 'மாற்று' என்பதன் நீரோட்டத்தில் இருப்பவர்கள் கூட மன இறுக்கங்களுடனும், அவதூறு அரசியல் போக்குகளுடனும், தற்பெருமையின் அடையாளங்களுடனும் இயங்கிக்கொண்டிருப்பது, 'மாற்று' என்பதன் வீர்யம்  'மெயின் ஸ்ட்ரீம்' சேரமுடியாமல் தடுத்திருக்கிறது. மக்கள் திரளாக ஆகாமல், 'மாற்றுக் கருத்தியலாளர்கள்', தனித்தனி மனிதர்களாகக் குறுகிப்போயினர்.

'மாற்று'க் கருத்தியலை,  'மெயின் ஸ்ட்ரீ'முக்குக் கொண்டு சென்று, பொதுச்சமூகத்தினர் இக்கருத்துகளை உள்வாங்கவைப்பதும், அவர்களையும் இவ்வியக்கங்களில் பங்குபெறவைப்பதும் இக்காலக்கட்டதின் அவசியமாகிறது.

ஆக, 'மாற்று' என்பதன் அவசியம் குறையாமல், நம் சமூகவெளிச்சத்தை 'மெயின் ஸ்ட்ரீ'முக்கு எடுத்துச்செல்லும் பொறுப்புணர்வும், அழகியலும், போராட்ட மனப்பான்மையும் கொண்டவர்கள் தாம் இன்று சமூகத்திற்குத் தேவைப்படுகின்றனர்.  'மெயின் ஸ்ட்ரீம்'  மாயையிலும் ஆர்ப்பாட்டத்திலும் மறைந்து விடாமல் இருப்பவர்கள் தாம் சமூகத்திற்கு அவசியம். 

இனி, 'மாற்று' என்பதே,  'மெயின் ஸ்ட்ரீம்' !





குட்டி ரேவதி