நம் குரல்

பரு

தழல் மேனி கட்டியணைத்து ஒரு கணமும் ஆசுவாசமாய்
அன்பை தின்னாதோரெல்லாம் உடலை ஒரு பருவாய் எண்ணி,
ஓடியோடி கண்ணாடி முன் நின்று கிள்ளிப்பார்க்கும் அருவருப்பாய்
ரகசியமாய் அவதியுறுகின்றனர்.

அல்லது
காடெல்லாம் களிப்போடு ஓடி வெறிகொண்டு திமிறும் நதியாய்
இரவுக்குள் தலைதெறிக்க இன்னோருடலை முத்தமிட்டு
வேகத்துடன் வாயிற்படியில் காசுவைத்து திரும்பிப்பாராது காலையைத்தொடுவர்




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: