நம் குரல்
அரசியல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுடும் பாதங்கள்
புத்தனுக்கும் சுடும் பாதங்கள்
ஆலங்கிளைக்கூந்தலை அள்ளி முடிந்த குவேனி
சிம்மத்தை மோகித்து தேசம் மாறி அலைந்தாள்
அவள் விதைத்த மகவோ
அச்சிம்மத்தையே இரையாக்கி
சுக்கானிழந்த கப்பலாய் திசை களைத்தான்
பாதங்களின் திசையழித்து நோக்கழித்து
காடெரித்து மரம் தின்று இன்றும்
விழி மிதித்து குழந்தைகளையும் சவைத்து
மாங்கொட்டை சூப்பி எரிந்த மண்வெளியாய்
மிதக்கச்செய்கிறான் நிலப்பிண்டத்தை
உடல் பாளங்களாக வெடித்து
கண்ணீர் திரளும் எம்முடல் நிலத்தில்
நடந்தேகச்சொல்லுங்கள் அவனை
கதிர்காமத்துறையும் கடவுளையும்
மாற்றிக்கொண்டு
புத்தனுக்கும் சுடும் பாதங்கள்
குட்டி ரேவதி
லேபிள்கள்:
அரசியல் கவிதை,
ஈழம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)