நம் குரல்

விடுதலை யான் .... கவிஞர் குட்டிரேவதி

(என் முதல் ஐந்து கவிதை நூல்களுக்கு மதிப்புரை செய்திருக்கிறார் தோழர் பெரியார் குமார். சரியான கவிதைகள் வழியாக என் நோக்கத்தைத் தொட்டிருக்கிறார். நன்றிகள்.)



 மரபை மீறும் பயணத்தின் போது அகத்தே தன்னை கடந்து செல்லும் எதுவும், புறத்தே நின்று கவனிப்பதைஅறிந்தே இப்படி தொடங்குகிறார் கவிஞர் குட்டிரேவதி  “கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும்தேசத்திலிருந்து வந்தவள் நான்என்று.

      யானுமிட்ட தீ
      உடலின் கதவு
      முலைகள்
      பூனையைப் போல அலையும் வெளிச்சம்
      தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

 என ஆய்ந்து கவிதை தொகுப்பின் வழி கட்டமைக்கப்பட்டுள்ள ஆண் மையப்புனைவை உடைத்துச்சிதைத்து சிறகசைத்துப்  பறக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

  “பெண்கள் பிள்ளை பெரும் எந்திரங்களல்ல என்றார் தந்தை பெரியார். இயற்கையில் கர்ப்பப்பையேவலையாகி பெண்ணுடலை சிறைபிடித்திருப்பதை ஆய்ந்துணர்ந்த தந்தை பெரியார் பெண்ணுடலைவிடுவிக்க  கர்ப்பப்பையையே வெட்டி எறியச் சொன்னார்.

  ”ஆணைப் பெற்றது பெண்சரி / பெண்ணைப் பெற்றதும் பெண்ணா? / என்ன அநியாயம்”. என்றுஇயற்கையே பெண்களுக்கு எதிராக இருப்பதை கேள்வியாக்குகிறார் குஞ்ஞிண்ணி.

துடைத்தகற்ற முடியாத / இரண்டு கண்ணீர் துளிகள் / முலைகள்,”  என்று குட்டிரேவதியும் இவர்கள்வழியில் இயற்கையிலேயே பெண்ணுடல் வஞ்சிக்கப்பட்டுள்ளதை கண்டடைகிறார்.

 மனிதர்கள் வர்ணாஸ்ரமப் பாகுபாட்டின் ஜதிகளாகப்பகுக்கப்பட்டு, அதிலும் தெருகூட்ட, மலம் அள்ள,அழுக்கை வெளுக்க என்று தனத்தனி ஜாதிகள் உருவாக்கி, அந்த வேலைகளை செய்வர்களை இழிவானவர்களாக ஆக்கி அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடப்பதை நாம் அறிவோம்.

  இப்படி ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் வேலைப் பிரிவினையாக கருதப்படும் கூட்டுவது, மலமள்ளுவது,அழுக்கை வெளுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் குடுப்பத்தின் பெயரால்  பெண்ணுடல் மீதுதிணிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்..? இப்படி சொல்லலாம் ஒடுக்குதலின் ஒட்டு மொத்த வடிவத்தின்பெயர்பெண்என்று....

  இந்த மண்ணின் எற்கனவே நிருவப்பட்டுள்ள ஜாதி, சமய, குடும்ப,பண்பாட்டு அமைப்புகளை கெளரவம்குறையாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தொடர் சங்கிலியாகவே இங்கேபெண்ணுடல் பிரசவிக்கப்படுகிறது.

  இந்த சூழலில் பிரசவிக்க மறுத்து இயற்கையாகவும், வலிந்து கட்டமைக்கப்படும் பெண்மையின் குரலாகபெருங்குரலெடுத்து

     ”இந்த மண்ணுக்காக அல்ல எனதுடல்
     எனது உடலுக்காகத்தான் இந்த மண்

 என்று அறிவித்து விடுதலைப் பறவையாகப் பறக்கிறார் குட்டிரேவதி.

எவற்றையும் மறக்க முடியாது ஊமையாகிப் போன பெண்ணின் உள்தனிமையை இப்படிகவிதையாக்குகிறார்.

      “ தனிமையில் மட்டும்
       கசியும் உள் தனிமை
       பெருங்கடலாய் உருவெடுத்து
       அலையெழுப்பும்
       வேறு மனித வாசனை வீச
       ஒரு துளியாய் திரண்டு விழி நிரப்பும்”.
      கோள நீர்ப்பரப்பில்
      காட்சியாகும் உள்தனிமை
      காலச்சரிவில் உருண்டுடோடிப்
      பழுத்தப் பாறைகளைப் போல
      பாரமாய் விடும் கண்ணீர்த்துளிகளை
    ஏந்த வழுவுண்டா உன் கைகளுக்கு”?

தனிமையில் சுரக்கும் எண்ணங்களின் ஒரு துளியும். அது தன்னுள் சுரந்தாலும், பெருங்கடலெனபல்லாயிரம் ஆண்டுகளாக பிறமனிதவாசனையே நிறைந்த  கிடப்பதை கண்டு, அந்தத் துளியை ஆணாதிக்கம் இருகிக் கிடக்கும்  பெரு மலையாக உதிர்த்து விட்டு, இதை தாங்க இங்கே எவனுக்கடாசக்தி உண்டு? என்று கேட்கும் பதில்கள் அனேகமாக மெளனமாய்த் தானே இருக்க முடியும்.

 எவ்வளவு கனமான துளுகளை கண்ணிராக உதித்தாலும் கவலையின்றி பெண்ணுடலை தனதாக்க  இந்தசமூகம் செய்து வைத்துருக்கும் அத்தனை மயாவித்தைகளையும் கண்டுணர்ந்த குட்டிரேவதி, எதிர்மந்திரக் காரியாகிதன் எரி சக்தி கவிதையில்.

எரி சக்தி
வலிகளை உச்சரிக்கத் தெரியாத
வழிகளைத் தேடியலையாத
புடைவை ஒதுக்கி நடக்கும்
பெண்களைத்தான் உனக்கு பிடிக்கும்
அனால் உணர்வுகளின் குவியல் நான்     
ஒளி தேசத்தில் வாழவிரும்பும்
விடுதலைப்பறவை.....
ஒரே பிறப்பில் 
அழவும், சிரிக்கவும்,ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்...
மண் வாசனையும் மலைத்திமிரும்
நதியேட்டமும்
என்னுள் கிளர்ந்தெழுவதைக்
கட்டுப்படுத்த இயலவில்லை
நவதுவாரங்களின் வழியாகவும்
கனவுகள் பீறிடுகின்றன
ஜனங்கள் திரளும் நிஜக்காட்டில்
வேட்கை பெருகப் பெருக
வேட்டையாட அலைகின்றேன்
கன்னத்தில் உருண்டு உதிரும்
கண்ணீர்த்துளிகளைச் சாட்சியாக்கி
உன்னிடம் கருணை சம்பாதிப்பதில்
எனக்கு பெருமை யேதுமில்லை
                                  பூ..வெளிச்சம்

என்றுதன்னுடல் தனக்கேஅல்லதுபெண்ணுடல் பெண்ணுக்கேஉரிமைப் போர் முழங்குகிறார்.

  ஆசைகள், கனவுகள், கோபம், நேசம், துயரம், சிறகுகள், விடுதலை என அனைத்தும் ஊறி நிற்கும்உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகிய உடலே சிறையாக்கி, சிறையே உடலாகி இடம்பெயரமுடியாத மரமாய்கிடப்பதை தனதுஅரசமரம்கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

"ஆணியால் அறையப்பட்ட
பட்டாம் பூச்சிகளாய்ப்
பதறுகின்றனவா அதன் இழைகள்?
வெளிச்சச் செதில்களோடு
கிளைத்துக்
காற்றின் வெளியில்
நிந்தத்  துடிக்கிறதா அதன் உடல்?"
                                         பூ..வெ.29(பக்)
         
தனே நிர்வாணமாய்க் கிடந்து கருவாக்கி பிரசிவித்த ஆண்மை தன்னையெடுக்க விரட்டி வரும் பாதையில்நேருக்கு நேர் நின்று, இனி நாங்கள் ஓடுவதில்லை அன அறிவித்து, சூரியனின் தோல்களில் கை கோர்த்துவாருங்கள் தோழர்களே என எரித்து சாம்பலாக்க அழைக்கின்றார்.

                  யானுமிட்ட தீ -2

  அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்
முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்
மெல்லத்திரளும் உதிரப்பெருக்கை கடலென்றும்
கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்
உங்களுக்கான பிரபஞ்சா நீள்வலையைப் பயணத்தை
  மறுக்கிறாள்
மெளனிக்கிறாளென்பதைக் கூரிக்கொள்கிறேன்
உடலெங்கிலும் அயுதம் புதைத்த வனமாகியவள்
என்னறியாமல் அம்பெய்திய உங்கள் கைகள்
வழியெங்கும் சமிக்ஞைகளால்
அவள் எம்பிய வேட்டை அம்புகளால்
கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய
வெடி மருந்துருண்டைகளால்
உம்முடல் வெடித்துச் சிதறலாம்
எதிர்பாராத காலையில்
தொடைகளுக்கு இடையில் விரியும் கானகப்பாதை
பால் வெளியாக நீளும் என்று
அவள் வானம் வரைந்தாலும்
உருண்டுருண்டு ஒடும் கோள்களின் கன்னி வலையில்
எந்நெரமும் சிக்கிக் கொள்ளலாம்
உமது குறிகள் என்றாலும்
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் தோழர்களே
இரை கண்ட
காட்டு மிருக மொன்றின் பாய்ச்சலாய்
திமிறிக் கொண்டிருக்கிறது
யோனியைக் பதுக்கி வைத்திருப்பவள்
மரங்கள்முற்றா முகிழ்  முலைகளாகிப் 
பூத்துக் கொட்டும் பிரதேசமொன்றை
நிர்வாண உடலுமாக்கியவள்
யானுமிட்ட தீ ஈதன்று சூரியனைச் சுட்டும் போது
நம்பித்தான் ஆக வெண்டும் தோழர்களே!

யா.தீ. பக் 75

மூடுண்டை பெண்ணுடலை காம்ம் வழியாக குதற பயிற்சி பெற்ற விழிகளுக்கு தன்னுடலை நிர்வாணமாக்கிநின்று காட்டி அதிச்சியூட்டுகிறார். வெறும் சதைப்பிண்டமாக இல்லாமல் முலைகள் தன்னை வீழ்த்தும்எதிரியாக, காதலாக,தாய்மையாக, நேசமாக, தோழனாக தன்னோடு தொடர்வதை தன் 'முலைகள்'கவிதையில்
 " முலைகள் 
சதுப்பு நிலக் குமிழிகள் 
பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை
மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தின் 
திமிறிய பாவனையும் 
காமச் சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் 
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
      இரு கண்ணீர்த்துளிகளாய்
      தேங்கித் தளுப்புகின்றன

         முலைகள்பக் 15

    என்று குட்டிரேவதி  விவரிக்கும் போது பெண்ணுடலை கமப்பசியாற்றும் சதையாக, வெற்றுடலாகபார்த்து வந்த நமது பார்வைகள் இயல்பாகவே மறுபரிசீலனையாகின்றன
.

    பெண்மை தன்னைத் தானே கையாள்வதற்குத்தான் எத்தனை தடைகள், மெளனமாக கண்ணீர்உருத்துக்கொண்டிருக்காமல் தன்னைத்தானே அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்திற்கு எதிராக, கற்களல்லநாங்கள் தேவதைகள். இனி உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கிக் கிடக்கப்போவதில்லை எனவரங்களை தனதாக்குகிறார் தன் 'கற்கள்' கவிதையில்.

கத்தி கத்தி என் செவி திருப்பமுடியாமல்
வாயடங்கிக் கூடைகளில் பழங்களைப் போல்
கனிந்த மெளனத்துடன்
நினைவுகளால் பயனென்ன
தேவதையின் கனத்த தனங்கள்
அழுகிக் கொண்டிருக்கின்றன
வதங்கிய பூவிதல்போல் யோனி
புன்னைகை உதிர்த்து ஆவியாகிறது
என்றாலும்
தேவதைகள் அழக்கூடாது
      உடலின் கதவுபக் 113

காலனியாதிகம், ஏகாதிபத்தியம், இன, மொழி ஒடுகுதலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டங்களை,விடுதலை வீர காவியங்களை போற்றுகின்ற சமூகம், அதே சுதந்திரத்தை பெண் தனக்காக கோரி நிற்கும்போது கோரமாகி பழமை சமூகம் காட்டுவதைவார்த்தையின் அரசியல்கவிதையில்அம்பலப்படுத்தி,அஞ்சாமல் சுதந்திரத்தின் தோள் பற்றி பயணிக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

நான் அந்த வார்த்தையை தேர்ந்தெடுத்த போதுதான்
அதை அணிருந்த அரசியலெல்லாம்
தீப்பிடித்துக் கொண்டன.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடல்
சல்லடையாகித்
துவாரங்கள் வழியாகப் பீரங்கிகள் நீள்கின்றன.
எழுந்து நடக்கும் போது
கண்காணிக்கும் கேமராக்கள்
அங்கும் இங்கும் அசைந்து இல்லாத ஒன்றைப்
பதிவு செய்ய பறக்கின்றன
அந்த வார்த்தை தனது கருத்து புடைத்த தோல்
நோக்கும் இரு விழிகள்
வெண்மையான பாதங்களுடன்
கனத்த புத்தகத்திலிருந்து துள்ளி யொழுந்து
புதைத்துக் கறுத்த இதழ்கள்
வக்கிரங்கள் தோய்ந்த முலைகள்
இரவை மதியாத இதயங்கள்
சாவித்துளை வழியாகக்
கண்களை நீட்டும் பொய்கள்
வழியாக வெல்லம் பயளித்துக்
தீயைப் பரப்பியது"..
அந்த வார்த்தையை
அவர்கள் அணியாமல் இருந்திருக்கலாம்
தீப்பிடித்துக் கொண்டன
போர்களையோ தற்கொலை களையோ
கிஞ்சித்தும் பொருட்படுத்தாத அந்த வார்த்தை
தன் மீது பறந்த வந்து வீழ்ந்த சாம்பலை
உதறிவிட்டுத்
தன் பயனத்தின் மீது ஏறியது

தனிமையின் ஆயிரம் இரவுகள் – 11


    தன்னை ஒரு சக உயிரியாக மதிக்கக் கோரி ஆண் மையத்தை நெருக்கி நெருக்கி உறவாடமுயற்சிக்கிற பெண்மையை, ஆண்மையம் தொடர்ந்து விளிப்பு நிலைக்குத் தள்ளுவதை உணர்ந்துகொண்ட குட்டிரேவதி இப்படி எழுதுகிறார்.

குகைக்குள் நுழைந்த பறவை
இருளின் பாறையுடலில் மோதி
சிற கொடிந்தது 
கணக்கிலா முறைகள்.
ஒளியைத் தருவிக்க விரும்பாது
எதிர்திசையில் வெளியேறியது.”

  என்று தீர்க்கமான முடிவோடும், தன் கவிதைச் சிறகுகளோடும் ஆண்மையத்தின் நேர் எதிர்திசையில்பயணிப்பதை வாசகர்கள் அவரது தொகுப்புகளை வாசித்து உணரலாம்.

 தமிழ்க் கவிதையுலகம் பயன்படுத்தத் தயங்கும் வார்த்தைகளை, பேசத்தயங்கும்  பொருட்களைதிணிச்சலாகப் பேசுகிறார் கவிஞர் குட்டிரேவதி. தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களாலேயே கவிஞர் குட்டிரேவதியைஜீரணிக்க முடியவில்லை என்பது நாம் அறிந்ததே.

  அனைத்தையும் தாண்டி பெண்ணிய அறிவுச் சூழலில் கவிஞர் குட்டிரேவதியின் கவிதைகள் மிகமுக்கியமாக விளைவுகளை ஏற்படுத்தித்தான் தீரும் என்பது திண்ணம்.

இந்த உரையை கவிஞர் குட்டிரேவதியின் வரிகளிலேயே முடிக்கலாம் என நினைக்கிறேன்.

   ”இம்மண் எனது. உனது என்பதும் எனது. மண்ணில் வேர்களுன்றி நின்று கைகள் மலர்ந்தும் தாவரமும்நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச்சூரியன் வேண்டும். ஓயாத அலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான்.”
        யா.தீ – 78

         நன்றி


பெரியார்குமார்
53 .கே.டி.ஆர் காய்கறி மார்கெட்
இராசபாளையம்

செல். 9976904384

கருத்துகள் இல்லை: