நம் குரல்

வீரம் மிகு பெண், ஷீதல் சாதே!




ஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. "என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்!" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் "ஜெய் பீம்" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா  சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.





நன்றி: sabrangindia



கருத்துகள் இல்லை: