நம் குரல்

நவீன இலக்கியவாதிகள் யார்?

இன்று காலை இரண்டு இலக்கியவாதிகள் என்னை அழைத்தார்கள்.
சீரியசான இலக்கிய நிகழ்வு ஒன்று வடிவமைக்கவேண்டும், பத்து இலக்கியவாதிகளின் பெயர்களைத் தரமுடியுமா என்று கேட்டார்கள்.

நான் சொன்ன பெயர்களையெல்லாம் கேட்டு,
'இவர்களை எல்லாம் எப்படி இலக்கியவாதிகள் என்று சொல்கிறீர்கள்?' என்று அதிர்ந்தார்கள்.

ஏன்,
ரவுடித்தனம் செய்பவர்கள், சாதிக்குறியீடுகள் - சடங்குகள் செய்பவர்கள், குரு - சீடர் வழிபாடு கொண்டவர்கள், விருதுகள் பெற்றவர்கள், தன் பெயரில் விருதுகள் வழங்குபவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தொலைக்காட்சியில் தொடர்ந்து பேசுபவர்கள், யாரையேனும் புகழ்ந்துகொண்டே இருப்பவர்கள் அல்லது ஒருவரையேனும் அவதூறுசெய்தவர்கள், வீடு புகுந்து அடித்தவர்கள், ஃபேஸ்புக்கில் 500 லைக்குகளுக்குக் குறையாதவர்கள், பொதுவெளியிலும் எழுத்திலும் பெண்களை இழிவாகப் பேசுபவர்கள், புத்தகக்கண்காட்சியின் முகப்பில் ஆளுயரத்தட்டி வைத்தவர்கள்.....
இவர்கள் பெயரைச் சொன்னால் தான் 'இலக்கியவாதி' என்று ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதும்,
கப்-சிப் என்று பெயர்ப்பட்டியலை வாங்கிக்கொண்டு ஃபோனை வைத்துவிட்டார்கள்.

ஃபோனைத் துண்டிக்கும் முன், சென்னை வந்தால், உங்களை நேரில் சந்திக்கமுடியுமா என்றும் கேட்டுவைத்தார்கள்.
பயமில்லாதது போல் காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. tongue emoticon








கு





கு

கருத்துகள் இல்லை: