நம் குரல்

புத்தகக்கண்காட்சி 2013 - 1




நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு கடையாகச் சென்று, நான் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தேன். பட்டியலில் உள்ள நூல்களை கண்காட்சி முடிவதற்குள் வாங்கிவிட வேண்டும்!

எல்லா நூல்களையும் கண்காட்சியில் மொத்தமாகப் பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக, ஏனோ ஓர் ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டது.

நூல்களை அதிகமாகக் காட்சிப்படுத்துவதிலும் ஏதோ ஒரு பிழை இருக்கத்தான் செய்கிறது.

மூத்த எழுத்தாளர்கள் சமகாலத்துடன் கொண்டாட முடியாத உறவினாலும் புரிந்துணர்வு இன்மையாலும் நூல்கள் எல்லாம் பின் தங்கிப் போய் முகஞ்சுழித்துக் கொண்டதைப் போலிருந்தன.

இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் புதிய கதை சொல்லலுடன் எழுந்து வருகையில், மூத்தப்படைப்பாளிகள் எல்லாம் மண்டையில் தட்டி மூர்க்கத்தைக் குறைத்துவிடுவார்களே என்று தோன்றுகிறது.

அட்டைகளும் அழகுணர்ச்சி இழந்து முகம் தொங்கப் போட்டுக் கொண்டு உயரே நிற்கின்றன, புத்தகங்கள்.

புனைவு நூல்களின் மீது தான் விருப்பம் அதிகமாக இருக்கிறது. என்னைக் கண் சிமிட்டி வாவென்று பிடிவாதமாய் அருகில் அழைக்கும் நூலை வாங்கிவிடுவது என்று உத்தேசித்து இருக்கிறேன்!





குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: