tag:blogger.com,1999:blog-7700042097062198472.post4335012328292518915..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: கணையாழி இதழ் வெளியீடும் இலக்கியப்பண்பாடும்குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-29654626769422772122011-04-15T12:00:37.382+05:302011-04-15T12:00:37.382+05:30கணையாழி மீண்டும் வருவது குறித்து மகிழ்ச்சி...
உங்க...கணையாழி மீண்டும் வருவது குறித்து மகிழ்ச்சி...<br />உங்களது கவிதை -- பின்வரும் எனது கவிதைகளில் ஒன்றை நினைவுபடுத்தியது....<br /><br />-------------------<br /><br />நீர்த்த வார்த்தைகள்<br />மறத்த உணர்வுகள்<br />அர்த்தமற்ற ரசனைகள் …<br />இவை மத்தியில் என் வரிகளை<br />அரூவ வெளியில் புகையும் மலை முகடென<br />எழுதி முடிதிருக்கையில்<br />வெறும் சாம்பலாய் மிஞ்சிவிடுகிறது மனம்,<br />பீனிக்ஸ் பறவையை மட்டும் மீதமாய் விட்டு விட்டு ….<br /><br />சூழ் கொள்ளும் மகரந்தம் என<br />எழுதி எழுதி எழுதி… … …<br />கசக்கி எறிந்த பின்<br />அவற்றை அறிவியல் கூடமாக்கி ஆராயும்<br />வக்கிர உணர்வுகளில்<br />என் வார்த்தைகள் சிதைந்து உருமாரிப்போகின்றன.<br />இதில் என் எழுத்திற்கு மறுபிறப்பு கொடுத்ததாய் பெருமிதம் …<br />அதற்கு மேலும் நீண்டுவிடும் சிலாகிப்பு என<br />சூடு கண்ட பூனைகள் வெற்று பாத்திரத்தை உருட்டி அலைகின்றன,<br />என் கவிதை அறைகளில் ….<br /><br />என் எழுத்துக்களை சுற்றி ஓநாய்கள் …<br />நிர்வாணமாய் என் உணர்வுகள்…<br />என் எழுத்துக்களின் ஆடைகள்<br />சதைகளோடு பிடுங்கி எறியப்படுகின்றன.<br />பிய்ந்து தொங்கும் ரத்த சதைகளோடு<br />பிறந்த மேனியாய் ஓடுகிறன என் வரிகள்,<br />திறந்த திசை நோக்கி….<br /><br />இத்தனைகுமான பிண்ணனியில்<br />தொடரும் என் கவிதைகள்<br />பரந்த வெளியில் கூவித்திரியும் ஊர்க்குருவியாய்<br />நிறைந்து வழிகிறது ..<br />வெட்ட வெளிக்கு பழகியவன் காதுகளுக்கு<br />அவை தப்பி போகின்றன.ஆபுத்திரன்https://www.blogger.com/profile/05027244290761783035noreply@blogger.com