நம் குரல்

என் காதல்



நீருக்குள் மேகத்திரள் போல்
மிதக்கட்டும்
நீரைக்கிழிக்க முடியாது
நீரோட்டங்களூடே கிளைக்கும்
மரங்கள் போல் தழைக்கட்டும்
நில்லாது ஓடிக்கொண்டேயிருக்கட்டும்
அதன் ஓட்டம்
மதர்த்த குதிரைகளையும்
தனக்குள் அடக்கிக் கொள்ளட்டும்
சிலுவைகளைப் போல்
விண்செருகட்டும்
அதன் கண்



குட்டி ரேவதி

















2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்

ஆயிஷா சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்.